Published : 20 Feb 2025 06:52 AM
Last Updated : 20 Feb 2025 06:52 AM

சென்னை | கொள்​ளை​யடித்த பணத்தில் பங்கு கொடுக்க மறுத்த இளைஞர் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: கொள்​ளை​யடித்த பணத்தை பிரித்​துக் கொடுக்க மறுத்த இளைஞரை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதி​மன்றம் தீர்ப்​பளித்​துள்ளது. சென்னை ராயப்​பேட்டை பகுதியை சேர்ந்த தரணி (24), அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் (26) ஆகிய இருவரும் கடந்த 2015 மே 14-ம் தேதி ஆந்திரா​வில் கொள்​ளை​யடித்த பணத்​துடன் சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது, கொள்​ளை​யடித்த பணத்தை பிரித்​துக் கொடுக்​கு​மாறு கலைவாணன் கேட்க, தரணி மறுத்​துள்ளார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2015 ஜூன் 20-ம் தேதி சேப்​பாக்கம் எல்லீஸ் சாலை​யில் நின்று கொண்​டிருந்த தரணியை, கலைவாணன் தனது கூட்​டாளி​களுடன் சேர்ந்து கொலை செய்​துள்ளார். இதுதொடர்பாக திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து கலைவாணன் (26), கேசவன் (24), ராஜேந்திர பிரசாத் (24), விஜி (25), காந்த் (25), முகமது ரஹீம் (24), ஆஷிப் ஜேக்கப் (20), பாபு (19), சந்துரு (25), பாபு (24) ஆகிய 10 பேரை கைது செய்​தனர்.

சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஆர்.ராஜ்கு​மார் முன்பு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்தது. விசா​ரணை​யின்​போது, கலைவாணன் உயிரிழந்​து​விட்​ட​தால் மற்றவர்கள் மீதான வழக்கு விசா​ரிக்​கப்​பட்​டது. போலீஸ் தரப்​பில் மாநகர கூடுதல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் எஸ்.தன​சேகர் ஆஜராகி வாதிட்​டார். வழக்கை விசா​ரித்த நீதிபதி, குற்றம் சாட்​டப்​பட்ட கேசவன், ராஜேந்திர பிரசாத், விஜி, ஸ்ரீகாந்த், ஆஷிப் ஜேக்​கப் ஆகிய 5 பேருக்​கும் ஆ​யுள் தண்டனை ​வி​தித்​தும், மற்​றவர்களை ​விடுதலை செய்தும் தீர்ப்​பளித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x