Published : 20 Feb 2025 12:27 AM
Last Updated : 20 Feb 2025 12:27 AM

திருப்பூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: ஒடிசா பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - என்ன நடந்தது?

ஒடிசாவைச் சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 3 பேரை திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ரயிலில் 27 வயது பெண், தனது கணவர் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் திருப்பூருக்கு வந்துள்ளார். அவர்கள் அவிநாசி, தெக்கலூர் என பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், திருப்பூர் புஷ்பா திரையரங்கம் பகுதியில் தம்பதியினர், குழந்தையுடன் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நதிம் (24), முகமது டேனிஸ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி, அவர்களை லட்சுமி நகரில் உள்ள அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, வேலை தொடர்பாக சிலரிடம் அந்த இளைஞர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் குழந்தை மற்றும் கணவரை கத்தியை காட்டி மிரட்டி, அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அவர்களை மிரட்டி, அறையில் இருந்து இரவோடு இரவாக அனுப்பி வைத்தனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட தம்பதி திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரைக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், முகமது நதிம், முகமது டேனிஸ் ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் கோவை சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x