Published : 20 Feb 2025 12:04 AM
Last Updated : 20 Feb 2025 12:04 AM

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: இரு குழந்தைகளை கொன்ற தந்தை - சேலம் கெங்கவல்லியில் நடந்தது என்ன?

சேலம்: கெங்​கவல்லி அருகே மனைவி​யின் நடத்​தை​யில் சந்தேகப்​பட்ட ஆட்டோ ஓட்டுநர், மனைவி மற்றும் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்​டி​னார். இதில் பலத்த காயமடைந்த இரு குழந்தைகள் உயிரிழந்​தனர். காயமடைந்த மனைவி, மற்றொரு மகள் மற்றும் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் மருத்​துவ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்​கவல்லி அருகே​யுள்ள 74-கிருஷ்ணாபுரத்​தைச் சேர்ந்​தவர் அசோக்​கு​மார் (47). இவரது மனைவி தவமணி(38), குழந்தைகள் விஜய​தா​ரணி(13), அருள்​கு​மாரி(10), அருள்​பிர​காஷ்(5). சில ஆண்டு​களுக்கு முன்னர் நெய்​வேலிக்​குச் சென்ற அசோக்​கு​மார், அங்கு சகோதரருடன் தங்கி, ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு கெங்​கவல்லி வந்த அசோக்​கு​மார், வீட்​டில் இருந்தமனைவி, குழந்தைகளை அரிவாளால் வெட்​டி​னார். இதுகுறித்து தகவலறிந்த கெங்​கவல்லி போலீ​ஸார் அங்கு சென்​ற​போது, மகள் விஜய​தா​ரணி, மகன் அருள்​பிர​காஷ் ஆகியோர் இறந்து கிடந்​ததும், மனைவி தவமணி, மற்றொரு மகள் அருள்​கு​மாரி ஆகியோர் காயங்​களுடன் உயிருக்​குப் போராடிக் கொண்​டிருந்​ததும் தெரிய​வந்​தது.

மேலும், வீட்​டின் அருகில் அசோக்​கு​மாரும் தலையில் வெட்டுக் காயங்​களுடன் கிடந்​தார். காயமடைந்த அனைவரை​யும் மீட்ட போலீ​ஸார், ஆத்தூர் அரசு மருத்​துவ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், விஜய​தா​ரணி, அருள்​பிர​காஷ் ஆகியோரது உடல்களை பிரேதப் பரிசோதனைக்​காக, ஆத்தூர் அரசு மருத்​துவ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

மனைவி நடத்தையில் சந்தேகம்: மாவட்ட காவல் கண்காணிப்​பாளர் கவுதம் கோயல் மற்றும் போலீ​ஸார் அங்கு சென்று விசாரணை மேற்​கொண்​டனர். இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: நெய்​வேலி​யில் ஒரு பெண்​ணுடன் அசோக்​கு​மார் நெருங்​கிப் பழகி​யுள்​ளார். அந்தப் பெண்​ணின் சகோதரர் மிரட்​டிய​தால், சொந்த ஊருக்கு திரும்​பினார். இந்நிலை​யில், தனது மனைவி​யின் நடத்​தை​யில் சந்தேகம் ஏற்பட்​டுள்​ளது. இதனால் ஆத்திரமடைந்த அசோக்​கு​மார், மது அருந்திய நிலை​யில் வீட்டுக்கு வந்து அரிவாளால் மனைவி, குழந்தைகளை வெட்​டி​விட்டு, தன்னை​யும் வெட்​டிக் ​கொண்​டுள்​ளார். அவர் மருத்​துவ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள​தால், சிகிச்​சைக்​குப் பின்னர் அவரை கைது செய்து, ​விசாரணை நடத்​தப்​படும்” என்​றனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, குடும்பத்தினர் அனைரையும் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x