Published : 06 Feb 2025 12:27 AM
Last Updated : 06 Feb 2025 12:27 AM

​ராணிபேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

தமிழரசன்

ராணிப்​பேட்டை: காவல் நிலையம் மீது பெட்​ரோல் குண்​டுகள் வீசிய வழக்​கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்​றவாளி தமிழரசன் கைது செய்​யப்​பட்​டார்.

ராணிப்​பேட்டை மாவட்டம் சிப்​காட் காவல் நிலை​யத்​தின் மீது கடந்த 2-ம் தேதி மர்ம நபர்கள் பெட்​ரோல் குண்​டுகளை வீசிச் சென்​றனர். இது தொடர்பாக ஸ்ரீதரன் (28), டோனி மெக்​கலின் (23) ஆகியோரை போலீ​ஸார் சில தினங்​களுக்கு முன்பு கைது செய்​தனர். இதற்​கிடை​யில், முக்​கிய குற்​றவாளியான தமிழரசன்​(48) நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

எலும்பு முறிந்​தது... இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “முக்கிய குற்​றவாளியான தமிழரசன் மீது கொலை, பணம் கேட்டு மிரட்​டல், பெட்​ரோல் குண்டு வீசுதல் உள்ளிட்ட வழக்​குகள் நிலுவை​யில் உள்ளன. பெட்​ரோல் குண்​டுகள் வீச்சு சம்பவத்​தில் தனது மகன் ஹரி (18) என்பவரை​யும் ஈடுபடுத்​தி​யுள்​ளார். ஹரியை தனிப்படை போலீ​ஸார் கடந்த 3-ம் தேதி சுட்டுப்​பிடித்​தனர். மேலும், விஷால் (20), பரத் (18) ஆகியோ​ரும் கைது செய்​யப்​பட்​டனர். முக்கிய குற்​றவாளியான ரவுடி தமிழரசன் சிப்​காட் அருகே பதுங்கி​யிருப்பது தெரிய வந்​தது. அவரை நேற்று தனிப்படை போலீ​ஸார் விரட்​டிச் சென்​ற​போது தடுக்கி விழுந்து, கை, கால்​களில் எலும்பு முறிவு ஏற்பட்​டது. அவரைக் கைது செய்​துள்ளோம். சிகிச்​சைக்காக வேலூர் அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்​துவ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்” என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x