Published : 16 Jan 2025 10:55 AM
Last Updated : 16 Jan 2025 10:55 AM

ரவுடி பாம் சரவணன் ஆந்திராவில் கைது: ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை

சென்னை: பிரபல ரவுடி வெள்ளை உமா கொலை வழக்கு உட்பட 26 வழக்​கு​களில் தொடர்​புடைய பாம் சரவணன் ஆந்திரா​வில் கைது செய்யப்பட்டார்.

சென்னை புளியந்​தோப்பு வெங்​கடேசபுரத்தை சேர்ந்​தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்​கு​கள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 26 வழக்​குகள் உள்ளன. இதில் 3 கொலை வழக்​கு​களில் இவரை பிடிக்க உயர்​நீ​தி​மன்றம் உத்தர​விட்​டது. அவர் தலைமறைவான நிலை​யில் சென்னை காவல் துறை பல்வேறு இடங்​களில் தனிப்படை அமைத்து சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலை​யில் சரவணன் ஆந்திரா​வில் இருப்​பதாக கிடைத்த தகவல் அடிப்​படை​யில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்​றனர். அங்கு சித்தூர் மாவட்டம் வரதப்​பாளையம் பகுதி​யில் ரவுடி பாம் சரவணனை போலீசார் துப்​பாக்கி முனை​யில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை​யின் புறநகர் பகுதி​யில் ரகசிய இடத்​தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விரை​வில் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்படு​வார் என​ போலீஸார் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x