Published : 16 Jan 2025 10:09 AM
Last Updated : 16 Jan 2025 10:09 AM

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: உத்தர பிரதேச இளைஞர் கைது

சென்னை: சென்னை ஐஐடி​யில் படிக்​கும் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தேநீர் கடையில் வேலை செய்​யும் உத்தர பிரதேச இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சென்னை கிண்​டி​யில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்​தில் பொறி​யியல் மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்​டார். இதுதொடர்​பாக, கோட்​டூர்​புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்​யப்​பட்​டார். இச்சம்​பவம் தமிழகம் முழு​வதும் பெரும் அதிர்​வலைகளை ஏற்படுத்​தி​யது. இந்த பரபரப்பு அடங்​கு​வதற்​குள், சென்னை ஐஐடி மாணவிக்கு இதேபோன்ற சம்பவம் நடந்​துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: "சென்னை ஐஐடி​யில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடு​தி​யில் தங்கி​யுள்​ளார். பொங்கல் பண்டிகை நாளான கடந்த 14ம் தேதி மாலை 5.30 மணி அளவில், உடன் படிக்​கும் தனது நண்பருடன் கோட்​டூர்​புரத்​தில் உள்ள பேக்​கரி​யுடன் இணைந்த தேநீர் கடைக்கு சென்​றுள்​ளார். அப்போது, அந்த கடையில் வேலை பார்க்​கும் இளைஞர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்​துள்ளார்.

தீவிர விசாரணை: இதுதொடர்பாக கோட்​டூர்​புரம் காவல் நிலை​யத்​தில் மாணவி புகார் கொடுத்​தார். இதையடுத்து, போலீ​ஸார் விரைந்து சென்று, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்​ததாக கூறப்​பட்ட இளைஞரை பிடித்து விசா​ரித்​தனர். அவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீராம் (29) என்பது தெரிய​வந்​தது. அவர் மீது போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​தனர். உடனடியாக அவரை கைது செய்து நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைத்​தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸ் தரப்​பில் கூறப்​படு​கிறது.

ஐஐடி நிர்​வாகம் விளக்கம்-இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடி நிர்​வாகம் நேற்று விளக்கம் அளித்​துள்ளது. அதில் கூறப்​பட்​டுள்ள​தாவது: சென்னை ஐஐடி வளாகத்​துக்கு வெளியே வேளச்​சேரி - தரமணி சாலை​யில் உள்ள தேநீர் கடையில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் கடந்த ஜனவரி 14ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பாலியல் தொல்​லைக்கு ஆளாகி​உள்​ளார். அப்போது, அந்த மாணவி​யுடன் வந்த மாணவர்​களும், அங்கிருந்த பொது​மக்கள் சிலரும் பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து, போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தனர். அதைத் தொடர்ந்து, போலீ​ஸார் அங்கு வந்து, அந்த நபரை கைதுசெய்​தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐஐடி நிர்​வாகத்​துக்​கும் தகவல் அளித்​தனர்.

எச்சரிக்கை​ தேவை: கைது செய்​யப்​பட்ட நபர், வெளி​யில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்ப்​பவர். அவருக்​கும் ஐஐடி நிர்​வாகத்​துக்​கும் எந்த சம்பந்​த​மும் இல்லை. ஐஐடி வளாகம் முழு​வதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்​தப்​பட்​டுள்ளன. வளாகத்​தில் வசிக்​கும் அனைவரது பாது​காப்​பை​யும் உறுதி​ செய்​யும் வகையில் தேவையான முன்னெச்​சரிக்கை நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்​டுள்ளன. வெளியே செல்​லும் போது எச்சரிக்கை​யுடன் இருக்​கு​மாறு ​மாணவி​களுக்கு ஏற்​கெனவே அறி​வுரை வழங்​கப்​பட்​டுள்​ளது. ​மாணவி​களுக்கு தேவையான அனைத்து உதவி​களை​யும் ஐஐடி நிர்​வாகம் தொடர்ந்து செய்து வரு​கிறது. இவ்​வாறு ஐஐடி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x