Published : 16 Jan 2025 01:27 AM
Last Updated : 16 Jan 2025 01:27 AM

கனிம வளத் துறை உதவி இயக்​குநர் காரில் ரூ.12.50 லட்சம் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட புவி​யியல் மற்றும் கனிம வளத் துறை உதவி இயக்​குநர் வள்ளல் (54), மணல், கல் குவாரி உரிமை​யாளர்​களிட​மிருந்து லஞ்சம் வாங்​கிக் கொண்டு, அந்தப் பணத்தை காரில் எடுத்​துச் செல்​வதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸுக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்து, நேற்று முன்​தினம் இரவு நல்லிபாளையம் செக்​-​போஸ்ட் அருகே போலீஸார் வாகன சோதனை​யில் ஈடுபட்​டனர். நாமக்​கல்​லில் இருந்து கோவை சென்ற கனிம வளத் துறை உதவி இயக்​குநர் வள்ளலின் காரை நிறுத்தி சோதனை​யிட்​ட​போது, உரிய ஆவணங்​களின்றி ரூ.12.50 லட்சம் இருந்தது தெரிய​வந்​தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த ​போலீ​ஸார், தொடர்ந்து ​விசாரிக்கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x