Published : 27 Apr 2023 05:01 AM
Last Updated : 27 Apr 2023 05:01 AM

புதிதாக 9,629 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,629 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 63,380-ல் இருந்து 61,013 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 10 பேர் உட்பட 29 பேர்உயிரிழந்தனர். இதன் மூலம்மொத்த உயிரிழப்பு 5,31,398 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,43,23,045 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 5.38 சதவீதம் ஆகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 5.61 சதவீதம் ஆகவும் உள்ளது.

நாட்டில் இதுவரை 4.49 கோடிபேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x