Published : 12 Apr 2023 05:51 AM
Last Updated : 12 Apr 2023 05:51 AM

திருச்சி | 7 கர்ப்பிணிகளுக்கு கரோனா

திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக 7 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் கர்ப்பிணிகள். இவர்கள் அனைவரும் பிற உடல் நல பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணிகள் 7 பேர் உட்பட 9 பேரும் தற்போது நலமுடன் உள்ளனர்.

இருப்பினும் மேலும் ஒரு வாரம் அவர்கள் தொடர் கண்காணிப்புக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x