Last Updated : 16 Sep, 2015 11:43 AM

 

Published : 16 Sep 2015 11:43 AM
Last Updated : 16 Sep 2015 11:43 AM

யு சான்றிதழுடன் அக்.1-ல் வெளியாகிறது புலி

விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் படம் என்பதால், படப்பிடிப்பு முன்பே முடிந்துவிட்டாலும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுவந்தன. முதலில் செப்.17ம் தேதியை கணக்கில் கொண்டு தான் படக்குழு பணியாற்றி வந்தது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் அக்டோபர் 1ம் தேதி வெளியீடு என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

அனைத்து கிராபிக்ஸ் பணிகளும் முடிவுற்று, சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். ஒரு சில இடங்களை மட்டும் நீக்கச் சொல்லி, சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இதனால் படக்குழுவினர் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

'யு' சான்றிதழ் கிடைத்திருப்பதால், விரைவில் வரிச்சலுகை அதிகாரிகளுக்கும் படத்தை திரையிட்டு காட்ட முடிவு செய்திருக்கிறது படக்குழு.

அக்டோபர் 1ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. நாளை (செப்.17) வெளிவரவிருக்கும் விளம்பரங்களில் அக்டோபர் 1 வெளியீடு என்று அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x