Last Updated : 08 Aug, 2015 02:39 PM

 

Published : 08 Aug 2015 02:39 PM
Last Updated : 08 Aug 2015 02:39 PM

கமலின் தூங்காவனம் படப்பிடிப்பு முடிவடைந்தது

ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வந்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் 'தூங்காவனம்' படத்தில் நடித்து வந்தார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, யூகி சேது, ஆஷா ஷரத் உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வந்தார்கள்.

படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சென்னை ஈ.சி.ஆர் சாலையில் PUB போன்ற அரங்கு அமைத்து முக்கியமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி வந்தார்கள்.

இந்நிலையில், 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஒரே கட்டப் படப்பிடிப்பில் மொத்தமாக முடித்துவிட்டார்கள்.

'ஸ்லீப்லஸ் நைட்' என்ற பிரெஞ்ச் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் 'தூங்காவனம்' என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி எப்படி தனது மகனைக் காப்பாற்றினார் என்பதே 2011ம் ஆண்டு வெளியான 'ஸ்லீப்லஸ் நைட்' திரைப்படத்தின் கதையாகும்.

'ஸ்லீப்லஸ் நைட்' படத்தில் பணியாற்றிய கில்லஸ் கோன்செய், சில்வியன் கேபட், வெர்ஜின் அர்னாட் என்ற இரு சண்டை இயக்குநர்கள் 'தூங்காவனம்' படத்திலும் பணியாற்றி இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x