Published : 08 Jul 2015 08:40 AM
Last Updated : 08 Jul 2015 08:40 AM
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவர் நினைவிழந்தார். இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதைத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT