Published : 14 Jul 2015 03:08 PM
Last Updated : 14 Jul 2015 03:08 PM

நானும் இந்திய சினிமாவும் அனாதையாக நிற்கிறோம்: எம்.எஸ்.வி. மறைவுக்கு எஸ்.பி.பி. உருக்கம்

நானும் இந்திய சினிமாவும் அனாதையாக இருக்கிறோம் என்று எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு குறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "எனது ஆசான், எனது தந்தை, எனது இசை எம்.எஸ்.வி மறைந்துவிட்டார். அவருக்கு நடந்து கொண்டிருக்கும் இறுதி அஞ்சலியில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை எனக்கு வர வேண்டுமா? அந்த அளவுக்கு சிறிய நல்லதைக் கூட நான் எனது வாழ்நாளில் செய்யத் தவறிவிட்டேனா என்ன. இந்த நேரத்தில் தானா அமெரிக்காவில் இருக்க வேண்டும்.

நானும் இந்தியா சினிமாவும் அனாதையாக நிற்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். கண்ணதாசனும் வாலியும் எழுதி வைத்த பாடல்வரிகளுக்கு மேலிருந்து அவர் இசையமைக்க இருக்கும் தெய்வீக இசையை கேட்க முடியுமா?

'ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ' வானில் முழு நிலவாக இருக்கிறார் அவர்." என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x