Published : 26 Jul 2015 01:16 PM
Last Updated : 26 Jul 2015 01:16 PM
'10 எண்றதுக்குள்ள' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ம் தேதி துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
விக்ரம், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் '10 எண்றதுக்குள்ள'. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை விஜய் மில்டன் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் மட்டும் பாக்கி இருந்ததால், படம் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிக்காமல் இருந்தது. அக்டோபர் 2ம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், படப்பிடிப்பு எப்போது என்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது "'10 எண்றதுக்குள்ள' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் மற்றும் சில காட்சிகளை ராஜஸ்தானில் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் விக்ரம் மற்றும் சமந்தா உள்ளிட்ட படக்குழு கலந்து கொள்ள இருக்கிறார்கள்" என்று அப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
'10 எண்றதுக்குள்ள' முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார் விக்ரம். இதனால் மலேசியாவில் தொடங்கவிருந்த ஆனந்த் ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT