Last Updated : 25 Jul, 2015 10:41 AM

 

Published : 25 Jul 2015 10:41 AM
Last Updated : 25 Jul 2015 10:41 AM

ரஜினி படம் குறித்து எதுவும் பேச முடியாது: ராதிகா ஆப்தே

ரஜினி - ரஞ்சித் படம் குறித்து தற்போது எதுவும் பேச முடியாது என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை, முரளி ஒளிப்பதிவு, ப்ரவீன் எடிட்டிங் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ராதிகா ஆப்தேவிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். விரைவில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியானது. ரஜினி படம் குறித்து எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்காமல் தவிர்த்து வந்தார் ராதிகா ஆப்தே.

இந்நிலையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் "அப்படத்தில் இன்னும் நான் ஒப்பந்தமாகவில்லை. ஆகையால், தற்போது இருக்கும் நிலையில் அப்படத்தைப் பற்றி எதுவும் பேச முடியாது" என்று ரஜினி - ரஞ்சித் படம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே பிரகாஷ்ராஜ், கலையரசன், 'அட்டகத்தி' தினேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x