Published : 15 Jul 2015 09:52 AM
Last Updated : 15 Jul 2015 09:52 AM

நெஞ்சம் மறப்பதில்லை...

தன் இறுதி மூச்சுவரை இசைக்காகவே வாழ்ந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் வாழ்க்கைக் குறிப்பு:

மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்கிற எம்.எஸ்.விஸ்வநாதன், கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (1928) பிறந்தவர். சிறு வயதில் தந்தையை இழந்த அவர், கண்ணனூரில் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். பள்ளிப்படிப்பை விட இசையில் அதிக நாட்டம் உடையவராக வளர்ந்தார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். அவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதனை 13 வது வயதில் மேடையில் எற்றி கச்சேரி செய்ய வைத்தார்.

நடிப்பில் அதிக ஆர்வம்கொண்ட எம்.எஸ்.வி, கோயம்புத்தூரில் இருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் சினிமா கம்பெனியில் சாதாரண ஊழியராக வேலை பார்த்தார். அங்கு பணியாற்றிய இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவிடம் முறையே இசை பயின்றார். அதன்பிறகு சென்னைக்கு வந்தவர், இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் சேர்ந்து 1948-ல் ‘அபிமன்யு’ படத்தில் ஆர்மோனியக் கலைஞராக பணியாற்றினார். இந்தக் குழுவில் டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராக சேர்ந்தார்.

சி.ஆர்.சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். பின்னர் ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர்.

1952 ல் வெளியான ‘பணம்’ திரைப்படம் தொடங்கி 1965-ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை அவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தனர். 65- ல் பிரிந்த அவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எங்கிருந்தோ வந்தான்’ படத்துக்காக மீண்டும் இணைந்து பணியாற்றினர். எம்.எஸ்.விஸ்வநாதன் தனித்து இசையமைத்த படங்களில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘படகோட்டி’, ‘சிவந்த மண்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஸ்ரீதர், ப.நீலகண்டன், ஏ.சி.திருலோகசந்தர், கே.சங்கர், கே.பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் பல படங்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத் துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடித்து’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

வெளிநாட்டு இசைக்கருவிகளை தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தத் தொடங்கிய முதல் இசையமைப்பாளரும் இவரே. இசையமைப்பதுடன் பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு ஆகிய இசைக் கருவிகளையும் அவர் அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்த பெருமையும் அவரையே சேரும்.

கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.

கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.

ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களான எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையி லேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.

இளைய தலைமுறைக் கலை ஞர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்ளும் எம்.எஸ்.வி, இளைய ராஜாவோடு சேர்ந்து ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘செந்தமிழ்ப்பாட்டு’, ‘செந்தமிழ்ச்செல்வன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள் ளார். மேலும் பல இளம் இசையமைப்பாளர்கள் இசை யமைத்த பாடல்களைப் பாடி யுள்ளார். இசையமைப்பதுடன் ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க் கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட பாடலா சிரியர்களையும், பின்னணி பாடகர்களையும் அறிமுகப்படுத்தி யவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பின் னணிப் பாடகர்களைக்கொண்டு 1958- ல் இவர்தான் மெல்லிசை கச்சேரிகளை முதன்முதலில் மேடை யில் நடத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x