Last Updated : 13 Nov, 2014 12:24 PM

 

Published : 13 Nov 2014 12:24 PM
Last Updated : 13 Nov 2014 12:24 PM

சூர்யா - விக்ரம் குமார் இணையும் 24

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரிக்கவுள்ள படத்துக்கு '24' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வரும் சூர்யா, அதைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான 'மனம்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உடனே, தனது தயாரிப்பில் ஒரு படம் இயக்குமாறு ஒப்பந்தம் செய்தார் சூர்யா.

முதலில் 'மனம்' படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று திட்டமிட்டார் சூர்யா. ஆனால், அது நடைபெறவில்லை. உடனே விக்ரம் குமார் தன்னிடம் இருந்த '24' என்ற கதையை கூறினார். அக்கதையை சூர்யாவிற்கு பிடித்துவிடவே அப்படத்தை ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை, வினோத் கேமிரா, ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பு என பெரும் பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா.

'24' கதை ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. இப்படத்தின் நாயகி, சூர்யாவுடன் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்டவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x