Last Updated : 14 Dec, 2013 01:29 PM

 

Published : 14 Dec 2013 01:29 PM
Last Updated : 14 Dec 2013 01:29 PM

செல்வராகவனுடன் இணையும் சிம்பு

செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு.

'வாலு', 'வேட்டை மன்னன்', பாண்டிராஜ் இயக்கும் படம், கெளதம் மேனன் இயக்கும் படம் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

தற்போது 'இரண்டாம் உலகம்' படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. இப்படத்தினை ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. பிப்ரவரி 2014ல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு, குறுகிய கால தயாரிப்பில் ஒரு ஆக்‌ஷன் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். சமீபத்தில் சிம்பு - செல்வராகவன் இருவருமே சந்தித்து கதை குறித்து விவாதித்து இருக்கிறார்கள்.

திரைக்கதை அமைக்கும் பணியில் செல்வராகவன் ஈடுபட்டு வருகிறார். இப்படத்திற்கு சிம்பு - செல்வராகவன் இருவரின் நெருங்கிய நண்பரான யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால், இப்படத்திற்கு சிம்புவைத் தவிர வேறு யாரும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். சிம்பு - செல்வராகவன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ஏகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x