Published : 28 Oct 2015 08:52 PM
Last Updated : 28 Oct 2015 08:52 PM
தீபாவளி முடிந்த உடன் இசை வெளியீடு, டிசம்பரில் படம் வெளியீடு என்று 'இது நம்ம ஆளு' படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முதல் பிரதி அடிப்படையில் டி.ராஜேந்தர் வழங்க, பாண்டிராஜ் தயாரித்து வருகிறார்.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், இன்னும் 2 பாடல்கள் மட்டும் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டி.ராஜேந்தர் மற்றும் பாண்டிராஜ் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறாது.
இப்பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுகள் எட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி முடிந்தவுடன் படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். டி-சீரியஸ் மற்றும் சோனி ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையே இப்படத்தின் இசையை உரிமையைக் கைப்பற்ற போட்டி நிலவி வருகிறது.
இசை வெளியீடு முடிந்தவுடன், டிசம்பரில் படத்தை வெளியிட டி.ராஜேந்தர் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT