Published : 20 Jun 2015 12:07 PM
Last Updated : 20 Jun 2015 12:07 PM
'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து நடிக்கவிருக்கும் படத்தை தான் தயாரிக்கவில்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தற்போது 'ரஜினி முருகன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தனது அடுத்த படத்துக்காக பலரிடம் கதைகளை கேட்டுவந்தார் சிவகார்த்திகேயன். இறுதியாக அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இப்படத்தை தயாரிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது, "அப்படத்தை நான் தயாரிக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பர் ராஜா தான் தயாரிக்கிறார். அவர் தயாரிப்பதால் அனைவருமே நான் தயாரிக்கிறேன் என்று நினைத்துவிட்டார்கள். அப்படத்தின் தயாரிப்பாளர் நான் இல்லை" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT