Published : 18 Nov 2025 09:36 AM
Last Updated : 18 Nov 2025 09:36 AM
ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கிடையே இந்தப் படத்திலிருந்து விலகுவதாக, சுந்தர்.சி திடீரென அறிவித்தார். கதை பிரச்சினை காரணமாக அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ரஜினிக்கு பிடித்த கதையைத் தான் எடுப்போம் என்றும் ரஜினியின் படத்தை இயக்க புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக ரஜினி படத்தை வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் தனுஷ், அவர் படத்தை இயக்க இருப்பதாக இப்போது தகவல் பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT