Published : 09 Nov 2025 12:13 PM
Last Updated : 09 Nov 2025 12:13 PM

பக்தி படத்​தில் என்​.எஸ்​.கிருஷ்ணனின் பகுத்​தறிவு கருத்து

பாமா விஜ​யம், நரகாசுவர வதம், கிருஷ்ண துலா​பாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்​சம் மாற்றி உரு​வான படம், ‘பாரிஜாதம்’.

முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்​களிட​மிருந்து பெற்ற வரங்​களால் யாராலும் வெல்ல முடி​யாத சக்​தி​களைக் கொண்​டிருக்​கிறான், நரகாசுரன். அவனை யாராலும் அடக்க முடிய​வில்​லை. எப்​படி அடக்​கு​வது என்​றும் தெரியவில்​லை. அவனுடைய முற்​பிறப்​பில் நரகாசுரனின் தாயாக இருந்த, இப்​போது கிருஷ்ணரின் மனை​வி​களில் ஒரு​வ​ரான பாமா​வால் அடக்க முடி​யும் என்று நினைக்​கிறார் நாரதர். அதற்​கான வேலைகளில் இறங்​கும் அவர், அதைச் செய்து முடிப்​பது ஒரு கதை.

மற்​றொரு கதை​யில் அரிய பாரிஜாதப் பூவை ருக்​மணிக்​குக் கொடுக்​கு​மாறு கிருஷ்ணனிடம் கொடுக்​கிறார் நாரதர். இதனால் பாமாவுக்கு கோபம் வரு​கிறது. கிருஷ்ணன் மீது ருக்​மணி கொண்​டிருக்​கும் பக்தி மற்​றும் காதலை பாமாவுக்கு உணர்த்​து​வது இக்​கதை. மூன்​றாவது பகு​தி​யில் என்​.எஸ்​.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராம​சாமி, காகா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் காமெடி கதை இடம்​பெற்​றது. மூன்று கதை​யிலும் ‘பாரிஜாதம்’ முக்​கிய பங்கு வகிக்​கிறது.

கிருஷ்ண​ராக டி.ஆர்​.ம​காலிங்​க​மும், அவருடைய மனை​வி​கள் சத்​ய​பா​மா​வாக பி.எஸ்​.சரோஜா​வும், ருக்​மணி​யாக எம்​.​வி.​ராஜம்​மா​வும் நடித்​தனர். நாரத​ராக நாகர்​கோ​வில் மகாதேவன் நடித்​தார். அந்த கால​கட்டத்​தில் பிரபல குணச்​சித்​திர நடிக​ராக இருந்த ஆர்​.​பாலசுப்​பிரமணி​யம் நரகாசுர​னாக மிரட்​டி​யிருந்​தார். பத்​மினி - லலிதா சகோ​தரி​களின் நாட்​டிய​மும் படத்தில் உண்​டு. தனது லாவண்யா பிக்​சர்ஸ் சார்​பில் எஸ்​.கே.சுந்​தர​ராம ஐயர் இப்​படத்​தைத் தயாரித்​தார். இளங்​கோவன் திரைக்​கதை, வசனம் எழு​தி​னார்.

கே.எஸ்​.கோ​பால​கிருஷ்ணன் (கற்பகம் படத்தை இயக்கியவர் அல்ல) இயக்​கிய இந்​தப் படத்​துக்கு சி.ஆர்​.சுப்​பு​ராமன், எஸ்​.​வி.வெங்​கட்​ராமன் ஆகியோர் இசையமைத்​தனர். படத்​தில் 21 பாடல்​கள். கம்​ப​தாசன், சந்​தானகிருஷ்ண நாயுடு, பாப​நாசம் சிவன், உடுமலை நாராயணக​வி, கே.டி.சந்​தானம் பாடல்​கள் எழு​தினர்.

என்​.எஸ்​.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இணைந்து ‘பாரிஜாதப் பூ’ என்ற பாடலைப் பாடினர். அப்​பாடல் அப்​போது ரசிக்​கப்​பட்​டது. பசு​வின் பெரு​மை​யைச் சொல்​லும் பாடல் ஒன்​றை​யும் பாடி​யிருக்​கிறார் என்​.எஸ்​.கிருஷ்ணன். ‘பாது​காக்​கணும் பாங்கு பார்க்​கணும் பழக்கி வைக்​கணும்’ என்ற பாடல் அப்​போது ஹிட் லிஸ்​டில் இருந்​தது. பக்தி படம் என்​றாலும் பகுத்​தறிவு கருத்​துகளைக் கொண்டு என்​.எஸ்​.கிருஷ்ணன் அமைத்​திருந்த நையாண்டி நகைச்​சுவைக் காட்​சிகள் அப்​போது ரசிக்​கப்​பட்​டன. போலி நாரத​ராக புளிமூட்டை ராம​சாமி நடித்​தார். ‘பாரிஜாதம்’ பூவுக்​குப் பாரி​யும் சாத​மும் என அவர் கொடுக்​கும் விளக்​கம் குபீர் நகைச்​சுவை. ஜித்​தன் பானர்ஜி ஒளிப்​ப​திவு செய்​தார். 1950-ம்​ ஆண்​டு இதே தேதி​யில்​ (நவ.9) வெளி​யான இந்​தப்​ படம்​, வரவேற்​பைப்​ பெற்​றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x