Published : 06 Nov 2025 09:03 AM
Last Updated : 06 Nov 2025 09:03 AM

அந்த காலத்திலேயே ஒரே ஷாட்டில் ஒரு பாடல்

பிரபல பிரெஞ்சு எழுத்​தாளர் விக்​டர் ஹ்யூகோ​வின் ‘லெஸ் மிஸரபிள்​ஸ்’, 19-ம் நூற்​றாண்​டின் சிறந்த ஐரோப்​பிய நாவல்​களின் வரிசை​யில் ஒன்​றாகப் பேசப்​பட்​டது. பல்​வேறு மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்​டுள்ள இந்​நாவல், பல மொழிகளில் திரைப்​பட​மாக​வும் சின்னத்​திரை தொட​ராக​வும் மேடை நாடக​மாக​வும் மாற்​றம் பெற்​றிருக்​கிறது. இந்​நாவலை சுத்​தானந்த பார​தி​யார் தமிழில் மொழி​யாக்​கம் செய்​திருந்​தார். அதன் அடிப்​படை​யில் உரு​வாக்​கப்பட்ட திரைப்​படம், ‘ஏழை படும் பாடு’.

திருட்டு வழக்​குக்​காகச் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருக்​கும் கந்​தனை, போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் ஜாவர் மீண்​டும் கைது செய்​கிறார். ஒரு கிறிஸ்தவ பேராயர் அவனுக்கு உதவுவ​தால், கந்​தன் வாழ்க்​கை​யில் மாற்​றம் ஏற்​படு​கிறது. அவன் ஒரு தொழிற்​சாலை ஆரம்​பிக்​கிறான். தனது அடை​யாளத்தை மாற்றி உயரும் அவன், ஒருநாள் அந்​நகரத்​தின் மேய​ராகிறான். அவன் பழைய குற்​ற​வாளி என்​ப​தைத் தெரிந்து கொள்​ளும் இன்​ஸ்​பெக்​டர் ஜாவர், அவனை மிரட்​டு​கிறார். ஒரு கட்​டத்​தில் ஜாவரின் உயிரைக் காப்​பாற்​றுகிறான் கந்​தன். பிறகு என்ன நடக்​கிறது என்​பது கதை.

தமிழ் சினி​மா​வின் கிளாசிக் படங்​களில் ஒன்​றான இதில், கந்​த​னாக சித்​தூர் வி.​நாகையா நடித்​தார். போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் ஜாவ​ராக சீதா​ராமன், கிறிஸ்தவ பேராய​ராக செரு​களத்​தூர் சாமா நடித்​தனர். மேலும் வி.கோ​பால​கிருஷ்ணன், டி.எஸ்​.​பாலை​யா, டி.எஸ்.துரை​ராஜ், பத்​மினி, லலி​தா, என்​னத்த கன்​னை​யா, குமாரி என்​.​ராஜம் என பலர் நடித்த இப்​படத்​தின் மூலம் அடுத்​தக் கட்​டத்​துக்கு உயர்ந்​தார் நாகை​யா.

ஜாவ​ராக நடித்த சீதா​ராமன், வழக்​கறிஞ​ராக இருந்து நடிக​ராக​வும் திரைக்​கதை ஆசிரிய​ராக​வும் மாறிய​வர். அவர் இதில் நடித்த ‘ஜாவர்’ கதா​பாத்​திரம் சிறப்​பான வரவேற்​பைப் பெற்​ற​தால் அவர் பெயருக்கு முன் ‘ஜாவர்’ சேர்ந்து கொண்​டது. தன் வாழ்​நாள் முழு​வதும் அவர் ‘ஜாவர்’ சீதா​ராம​னாகவே அறியப்​பட்​டார்.

பஷி​ராஜா ஸ்டூடியோஸ் சார்​பில் எஸ்​.எம்.ரா​முலு நாயுடு தயாரித்த இப்​படத்தை கே.​ராம்​நாத் இயக்​கி​னார். இவர், மார்க்​கண்​டேயா (1935), கன்​னி​யின் காதலி (1949), மர்​மயோகி (1951), கதா​நாயகி (1955) உள்பட பல படங்​களை இயக்​கிய​வர். சிறந்த ஒளிப்​ப​தி​வாள​ரும் கூட.

இப்​படத்​தின் தொடக்​கத்​தில் திருடன் கந்​தனைத் திருத்​தும் பேராய​ராக, பாடகர் நாகர்​கோ​வில் கே. மகாதேவன் நடித்​தார். சில காட்​சிகள் படமாக்கப்​பட்ட பிறகு அவருக்​குப் பதிலாக செரு​களத்​தூர் சாமாவை நடிக்க வைத்​தார் தயாரிப்​பாளர். இந்த மாற்​றம் சரி​யான​தாக அப்​போது பேசப்​பட்​டது. அந்​தக் கால​கட்​டத்​தில் நட்​சத்​திர திரைக்​கதை எழுத்​தாள​ராக விளங்​கிய இளங்​கோவன், இப்​படத்​துக்கு திரைக்​கதை, வசனத்தை எழு​தி​னார். அவர் வசனங்​கள் பேசப்​பட்​டன. எஸ்​.எம்​.சுப்​பையா நாயுடு இசையமைத்​தார். படத்தில் எட்டு பாடல்​கள்.

எம்​.எல்​.வசந்​தகு​மாரி பாடிய ‘யௌ வனமே ஆஹா யௌவனமே’, ‘கண்​ணன் மனநிலையை தங்​கமே தங்​கம்’, பி.ஏ. பெரிய​நாயகி பாடிய, ‘ஓ ஆசைக் கிளியே ஆசைக்​கிளி​யே’, ராதா ஜெயலட்​சுமி பாடிய ‘வி​தி​யின் விளை​வால் அனாதை ஆனேன்’, நாகையா பாடிய ‘வாழ்வு மலர்ந்​
தது​வே’ உள்பட அனைத்​துப் பாடல்​களும் ரசிக்​கப்​பட்​டன.

இதில் ‘வி​தி​யின் விளை​வால்​...’ பாடலை இயக்​குநர் ராம்​நாத், ஒரே ஷாட்​டில் எடுத்து வியக்க வைத்​தார். அந்தக் கால​கட்​டத்​தில் இந்த தொழில்​நுட்ப அற்​புதம் பரபரப்​பாகப் பேசப்​பட்டது.

இப்​படத்​துக்​காக ஒரு கனவு பாடல் ஒன்​றைப் படமாக்​கத் திட்​ட​மிட்​டிருந்​தனர். கோபால​கிருஷ்ணனும், பத்​மினி​யும் நடிக்க வேண்​டும். ஆனால், படப்​பிடிப்பு அன்​று, தனது மனை​விக்கு உடல் நிலை சரி​யில்லை என்று இயக்​குநர் ராம்​நாத் வரவில்​லை. இதனால் செட்​டில் இருந்து ஓட்​டல் அறைக்​குத் திரும்​பி​விட்​டார், நடிகர் கோபால கிருஷ்ணன்.

தயாரிப்​பாளர் ரா​முலு நாயுடு, அந்​தக் காட்​சியை தானே இயக்​கப் போகிறேன் என்​றும் உடனடி​யாக படப்​பிடிப்​புக்​குத் திரும்​புமாறும் சொன்​னார், கோபால​கிருஷ்ணனிடம். ஆனால், அவர் வரமறுத்​து​விட்​டார். இதனால் கோபமடைந்த தயாரிப்​பாளர், அவரை கோவை​யில் இருந்து சென்​னைக்கு அனுப்​பி​விட்​டு, பாடல் காட்​சி​யைப்படமாக்​கி​னார். கோபால​கிருஷ்ணன் நடிக்க வேண்​டிய பாடல் காட்​சி​யில், திரு​வி​தாங்​கூர் சகோ​தரி​களில் ஒரு​வ​ரான ராகிணிக்கு ஆண் வேட​மிட்​டு, பின்​பக்​கம் இருந்​தும், லாங் மற்​றும் மிட் ஷாட் காட்​சிகளாகப் படமாக்கி முடித்​தார் அப்பாடலை.

1950-ம் ஆண்டு இதே நாளில் (நவ.6) வெளி​யான இப்​படம் மெகா வெற்​றியைப் பெற்​றது. தீபாவளிக்கு வெளி​யான ஏழை படும் பாடு, அப்​போது ஆங்​கிலப் படங்​களை மட்​டுமே திரை​யிடப்​பட்டு வந்த சென்னை ‘கேசினோ’ திரையரங்​கில் வெளி​யான முதல் தமிழ்ப் படம் என்ற சிறப்​பைப் பெற்​றது. ‘லெஸ் மிஸரபிள்​ஸ்’ படத்​தின்​ பா​திப்​பில்​ 1972-ம்​ ஆண்​டு ‘ஞான ஒளி’ என்​ற படம்​ வெளி​யானது. சிவாஜி கணேசன்​ நடித்​த இப்​படத்​தை பி.மாதவன்​ இயக்​கி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x