Published : 05 Nov 2025 02:29 PM
Last Updated : 05 Nov 2025 02:29 PM

உணர்வுகளை மாற்றும் திசை | ஒளி என்பது வெளிச்சமல்ல 05

ஒரு வடக்கன் வீரகதா

சினிமா என்​பது வெறும் காட்​சிகளின் தொகுப்பு அல்ல. அது பார்​வை​யாளரின் மனதை குறிப்​பிட்ட திசை​யில் இழுத்​துச் சென்று உணர்ச்​சிகளைத் தூண்​டும் ஒர் அற்​புதக் கலை. ஒரு காட்​சியை எந்​தக் கோணத்​தில் படமாக்​கு​கிறோம் என்​பதே அதன் உள்​மனத் தாக்​கத்​தை​யும், கதை​யின் போக்​கை​யும் தீர்​மானிக்​கிறது. ஒளிப்​ப​தி​வாளரின் காட்​சிப் பார்​வை​யானது இதயத்​தில் ஒலிக்​கும் மென்​மை​யான குரல் போன்​றது - அது பார்​வை​யாளரின் உணர்​வு​களை உயர்த்​தலாம், தாழ்த்​தலாம் அல்​லது குழப்​பத்​தில் ஆழ்த்தலாம்.

சிட்டிசன் கேன்

உயர​மும் தாழ்​வும் - உணர்​வு​களின் மாற்​றம்: ஹை ஆங்​கிள் ஷாட்​டு​கள் மற்​றும் லோ ஆங்​கிள் ஷாட்​டு​கள், மனித உணர்​வு​களை எதிரெ​திர் திசைகளில் மாற்​றும் சக்தி வாய்ந்த கருவி​கள் எனலாம். ஆர்​சன் வெல்ஸ் இயக்​கிய ‘சிட்​டிசன் கேன்’ (Citizen Kane 1941) என்ற ஹாலிவுட் திரைப்​படத்​தில், லோ- ஆங்​கிள் காட்​சிகள், கதா​பாத்​திரத்​தின் அதி​காரத்​தை​யும் ஆணவத்​தை​யும் அழகாக வெளிப்​படுத்​தின.

கேமரா தரையி​லிருந்து மேல்​நோக்​கிப் பார்க்​கும் போது, நாயகன் ஒரு மாபெரும் ஆளு​மை​யாகத் தோற்​றமளிப்​ப​தால் பார்வையாளரின் மனதில் அந்த உணர்வு ஆழமாகப் பதி​கிறது. மாறாக, உயர்ந்த கோணங்​கள், மனித மனத்​தின் அச்​சத்​தையோ, தளர்ச்​சி​யையோ அல்​லது சிக்​கலான மனநிலை​யையோ தெளி​வாகக் காட்​டு​கின்​றன. இவை பார்​வை​யாளரை கதா​பாத்​திரத்​தின் பலவீனத்​துடன் இணைக்​கும்.

பாரசைட்

சமத்​து​வத்​தின் பார்வை - பாரசைட் உதா​ரணம்: பொங் ஜூன் ஹோவின் ‘பாரசைட்’ (2019) திரைப்​படம், சமூக அடுக்​கு​களை கேமரா கோணங்​களின் வழியே அற்​புத​மாகச் சித்​தரித்​தது. செல்​வந்​தர்​களின் வீடு, உயரத்​தில் அமைந்​திருப்​பது போல​வும், ஏழைகளின் வீடு அடித்​தளத்​தில் இருப்​பது போல​வும் காட்​சிகள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. இது காட்சி அடுக்​கு​களாக​வும், சமூக அடுக்​கு​களாக​வும் இணைந்து செயல்​படு​கின்​றன.

ஆனால், உணர்வு ரீதி​யாக செல்​வந்​தர்​கள் ‘கீழே’ இருப்​பதை இப்​படம் நுட்​ப​மாகக் காட்​டு​கிறது; அவர்​கள் உண்​மை​யில் உள்​ளத்​தில் நிலைகுலைந்​தவர்​கள். மாறாக, ஏழை குடும்​பம் ஒன்​றாக உணவருந்​தும் காட்​சிகள் கண் மட்​டக் கோணத்​தில் படமாக்​கப்​பட்​டுள்​ளன. இது சமத்​து​வம், உறவு மற்​றும் மனிதத்​தன்​மையை அழகாக வெளிப்​படுத்​துகிறது. இந்​தக் கோணம் பார்​வை​யாளரை அந்​தக் குடும்​பத்​துடன் நெருக்​க​மாக இணைக்​கிறது.

மலை​யாள சினி​மா​வின் கலைந​யம்: மலை​யாளத் திரைப்​படங்​களில் கேமரா கோணங்​கள் மூலம் மனித உணர்​வு​கள், மிக​வும் கலைநய​மாக வெளிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. ‘ஒரு வடக்​கன் வீரக​தா’ (1989) திரைப்​படத்​தில் ஒளிப்​ப​தி​வாளர் ராமச்​சந்​திர பாபு, வீரத்​தின் பெரு​மை​யை​யும் உள்​ளக் கிளர்ச்​சி​யை​யும் தாழ்ந்த கோணங்​கள் மூலம் அற்​புத​மாகக் காட்​டி​னார். சூரிய ஒளி, வாளின் பிர​காசம், முகத்​தில் வழி​யும் வியர்வை – இவை அனைத்​தும் தாழ்ந்த கோணங்​களின் வழியே, போரின் அசலான உணர்ச்​சிகளைப் பார்​வை​யாளரின் இதயத்​தில் பரப்​பு​கின்​றன.

அதே​போல், ‘வைஷாலி’ (1988) திரைப்படத்​தில் ஒளிப்​ப​தி​வாளர் மது அம்​பட் பயன்​படுத்​திய டைனமிக் கோணங்​கள் மூலம் புராணக் காதல் காட்​சிகள் ஒரு மாய உலகத்தைக் காட்​டின. மேகங்​களின் வழியே மேல்​நோக்​கிய பார்​வை, தரையி​லிருந்து மென்​மை​யாகச் சுழலும் காட்​சிகள்– இவை காதலும் தியாக​மும் கலந்த உணர்​வு​களை மனதை மயக்​கும் வண்​ணம் மிக அழகாக வெளிப்​படுத்​தின.

பதேர் பாஞ்சாலி

சத்​யஜித் ரே - மனநிலை​யின் கோணங்​கள்: சத்​யஜித் ரே தனது திரைப்​படங்​களின் கேமரா கோணங்​களை உணர்ச்​சிகளின் மொழி​யாக மாற்​றி​னார். `பதேர் பாஞ்​சாலி' (1955)​யில், குழந்​தைகளின் பார்​வை​யில் உலகைச் சித்​தரிக்க தாழ்ந்த கண் மட்​டக் கோணங்​களைப் பயன்​படுத்​தி​னார். இது அப்​பட்​ட​மான நிஜத்தை நுணுக்​க​மாக​வும் அழகாக​வும் வெளிப்​படுத்​தி​யது.

‘சா​ருல​தா’​வில் (1964), ஹை ஆங்​கிள் கோணங்​கள் கதா​நாயகி​யின் தனிமை​யை​யும் விரக்​தி​யை​யும் துல்​லியமாகப் பிர​திபலித்​தன. இங்கு கேமரா பார்​வை, கதா​பாத்​திரத்​தின் உள்​ளத்​தின் உண்​மை​யான பிர​திபிம்​ப​மாக மாறியது. ரேயின் திரைப்​படங்​கள் கோணங்​களை வெறும் தொழில்​நுட்​ப​மாக அல்​லாமல், உணர்​வு​களின் கவிதை​யாக உயர்த்​தின.

சப்​ஜெக்​டிவ், ஆப்​ஜெக்​டிவ் மற்​றும் பாயின்ட் ஆஃப் வியூ – மூன்று மனக் கோணங்​கள் ஒளிப்​ப​தி​வின் உள்​மனப் பயணம் மூன்று முக்​கி​யத் திசைகளில் இயங்​கு​கிறது:

1. ஆப்​ஜெக்​டிவ் கேமரா - இது தகவல்​களை நேரடி​யாக அளிக்​கும் பார்​வை. பார்​வை​யாள​ருக்கு ஒரு வெளிப்​புற அனுபவத்​தைத் தரு​கிறது, கதையை தொலை​வில் இருந்து காணச் செய்​கிறது.

2. சப்​ஜெக்​டிவ் கேமரா - இது உணர்ச்​சிகளை நேரடி​யாக அனுபவிக்​கச் செய்​கிறது. கேமரா கோணம் கதா​பாத்​திரத்​தின் மனநிலையை பார்​வை​யாள​ருக்​குள் எளிதாகக் கொண்டு சென்​று, அந்த உணர்​வில் ஆழ்த்​துகிறது.

3. பாயின்ட் ஆஃப் வியூ - இது மேற்​சொன்ன 2 கோணங்​களை​யும் இணைக்​கும் பாலம். கேமரா ஒரு கதா​பாத்​திரத்​தின் பார்​வையை எடுத்​துக்​கொண்​டு, கதை​யின் உள்​முகப் பயணத்தை உரு​வாக்​கு​கிறது.

ஒரு காட்​சியை ஆரம்​பத்​தில் அப்​ஜெக்​டிவ் கோணத்​தில் தொடங்​கலாம். ஆனால் கதை முன்​னேறும்​போது, ஒரு கேமரா இயக்​கம் அல்​லது குளோசப் மூலம் அது சப்​ஜெக்​டிவ் கோண​மாக மாறி பார்​வை​யாளரை உள்ளே இழுக்​கலாம். இந்த மாற்​றம் காட்​சியை உயிரோட்​ட​மாக்​கு​கிறது.

திசை மாற்​றத்​தின் உணர்வு - டச் ஆங்​கிள்: சில நேரங்​களில், சற்று சாய்ந்த கோணங்​கள் மனதின் அமை​தி​யின்​மை​யைக் காட்​டு​கின்​றன. உளவியல் குழப்​பம், பயம் அல்​லது நம்​பிக்​கை​யின்மை போன்ற உணர்​வு​களை இந்​தக் கோணங்​கள் பார்​வை​யாள​ருக்கு கடத்​துகின்​றன. இது கதை​யின் பதற்​றத்தை அதி​கரித்​து, மனதில் ஒரு சிறு திசை​மாற்​றத்தை உரு​வாக்​கு​கிறது.

ஒளிப்​ப​தி​வில் கோணம் என்​பது வெறும் தொழில்​நுட்ப அம்​சம் மட்​டுமே அல்ல – அது ஒரு மனநிலை​யின் வெளிப்​பாடு. கதை​யின் உள்​ளார்ந்த கருத்தை வெளியே கொண்டு வரும் ஒரு அலை போன்​றது. ஒளிப்​ப​தி​வாளர் தன் கேம​ராவை எந்த உயரத்​தில் வைக்​கிறார், எந்​தத் திசை​யில் சுழற்​றுகிறார் என்​பதே கதை​யின் உணர்ச்​சிப் பாதையை நிர்​ண​யிக்​கிறது.

“கோணம்” என்​பது சினி​மா​வின் மவுனக் கவிதை; அது பார்​வை​யாளரின் இதயத்​தில் ஒரு மென்​மை​யான திசை மாற்​றத்தை ஏற்​படுத்​தும் நுட்​ப​மான கலை. ஒவ்​வொரு கோண​மும் ஓர் உணர்​வு, ஒளி, நிழல், மனம்​.

(புதன் தோறும் ஒளி காட்டுவோம்)

cjrdop@gmail.com

முந்தைய அத்தியாயம்: சினிமாவில் வண்ணப்புரட்சி கதையின் மொழியாக நிறம்! | ஒளி என்பது வெளிச்சமல்ல 04

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x