Published : 04 Nov 2025 11:15 AM
Last Updated : 04 Nov 2025 11:15 AM

‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தில் 3 கதைகள்: இயக்குநர் கே.பி.ஜெகன் தகவல்

‘பு​திய கீதை’, ‘கோடம்​பாக்​கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்​களை இயக்​கிய​வர் கே.பி.ஜெகன்.

இவர், மாயாண்டி குடும்​பத்​தார், மிள​கா, நாக​ராஜ சோழன் எம்​.ஏ, எம்​.எல்.ஏ உட்பட பல படங்​களில் நடித்​துள்​ளார். இவர் இப்​போது உண்மை சம்​பவத்​தைத் தழுவி ‘ரோஜா மல்லி கனகாம்​பரம்’ என்ற படத்தை கதை​யின் நாயக​னாக நடித்து இயக்​கி​யுள்​ளார்.

‘பிக் பாஸ்,’ விஜய் வர்​மா, சங்​கீதா கல்​யாண், ‘பிச்​சைக்​காரன்’ மூர்த்​தி, தியா, ரஞ்​சித் வேலா​யுதன், வெற்​றிவேல் ராஜா, திண்​டுக்​கல் அலெக்​ஸ், உறியடி சங்​கர் மற்​றும் பலர்ம் நடிக்​கின்​றனர். எம்.எஸ்.பாஸ்​கர் முக்​கிய​மான பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். ‘மா​யாண்டி குடும்​பத்​தார்’ படத்​தைத் தயாரித்த யுனைடெட் ஆர்ட்​ஸ், எஸ்.கே. செல்​வகு​மார் தயாரித்​துள்​ளார்.

படம் பற்றி கே. பி. ஜெகன் கூறிய​தாவது: மூன்று கதைகள் ஒரு நேர்​கோட்​டில் பயணிப்​பது தான் இப்​படத்​தின் திரைக்​கதை சுவாரஸ்​யம். ஒவ்​வொரு கதை களத்​துக்​கும், ஒரு பாடல் என்ற விதத்​தில் மூன்று பாடல்​களும், மூன்று கதைகளை​யும் இணைக்​கும் இடத்​தில் நான்​காவ​தாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்​களுக்​கும், பின்​னணி இசைக்​கும் முக்​கி​யத்​து​வம் நிறைந்த படமாக இது இருக்​கும். பெரும்​பாலான படப்​பிடிப்​பு, திருச்​செந்​தூர், தூத்​துக்​குடி, மணப்​பாடு ஆகிய பகு​தி​களில் நடந்​துள்​ளது. இறு​திக்​கட்ட படப்​பிடிப்பு சென்​னை​யில் நவம்​பர் மாதத்​தில் நிறைவு பெறும்” என்​றார். இப்​படத்​தின் ஃபர்​ஸ்ட் லுக் போஸ்​டரை இயக்​குநர்​கள் சேரன், விக்​னேஷ் சிவன்​ வெளி​யிட்​டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x