Last Updated : 27 Oct, 2025 12:48 PM

 

Published : 27 Oct 2025 12:48 PM
Last Updated : 27 Oct 2025 12:48 PM

ஆரூர்தாஸிடம் கற்றுக் கொண்ட பாடம்... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 4

நாங்​கள் சென்​னைக்கு வந்​தது 1972-ம் வருடம். லாயிட்ஸ் சாலை​யில் பைசன் கம்​பெனிக்கு அரு​கில் டி.கே.சண்​முகம் அண்​ணாச்​சி, டி.கே.பகவதி அண்​ணாச்சி வீடு இருந்​தது. அரு​கிலேயே அப்​பா​வின் நண்​பர் கருடலிங்​கத்​தின் வீடும் இருந்​தது. அவர் வீட்​டில்​தான் தங்​கினோம். அங்​கிருந்​து​தான் சென்னை வாழ்க்​கைத் தொடங்​கியது.

1978-ம் ஆண்டு நானும் அக்கா​வும் ‘சிட்​டுக்​குரு​வி’ படத்​துக்கு முதலில் டப்​பிங் பேசினோம் என்று கூறி​யிருந்​தேன். பிறகு அக்கா​வுக்கு வாய்ப்பு கிடைத்​தது. எனக்கு கிடைக்​க​வில்​லை. எனக்கு அப்​போது 21 வயது. வாய்ப்பு கிடைக்​க​வில்லை என்​றாலும் என் சினிமா முயற்​சியை விட​வில்​லை. ஏனென்​றால் அது என் பேராசை. தொடர்ந்து தேடிக் கொண்​டிருந்​தேன்.

அப்​போது​தான் பிரபல வசனகர்த்தா ஆருர்​தாஸ் ஐயா​வின் டப்​பிங் யூனிட்​டில் வாய்ப்​புக் கிடைத்​தது. ‘டப்​பிங் என்​றால் என்​ன?’ என்று எனக்கு உணர்த்​தி​ய​வர் அவர். ஒரு காலத்​தில் எம்​.ஜி.ஆர், சிவாஜி படங்​கள், இரவில் டப்​பிங் படங்​கள் என்று ஓயாமல், 24 மணி நேரம் போதாமல் அவர் உழைத்​துக் கொண்​டிருந்​தார்.

கூடெ​விடே

அவர்​களின் டப்​பிங்​கில் மம்​மூட்​டி​யும் ரஹ்​மானும் நடித்த ‘கூடெ​விடே’ என்ற மலை​யாள படத்​தில் பேச ஆரம்​பித்​தேன். இது​தான் நடிகர் ரஹ்​மானுக்கு முதல் படம். அப்​போது, “டேய் நல்லா பேசற. வேலையை கத்​துக்​கோ. நல்லா முன்​னுக்கு வரு​வே” என்று சொன்னார் ஆருர்​தாஸ் ஐயா. அது அவருடைய ஆசிர்​வாதம் போலவே இருந்​தது.

அவர்​கள் மாதத்​துக்கு இரண்டு படம் டப் பண்​ணு​வார்​கள். கம்ப்​யூட்​டர் வராத அந்த கால​கட்​டத்​தில் டப்​பிங் பேசுவதற்​கென்று சிலர் இருந்​தார்​கள். அவர்​களு​டன் பழகினேன். அவர்​கள் என் பணிவைப் பார்த்​து, என் பேச்​சைப் பார்த்து அவர்​களில் ஒரு​வ​ராக ஏற்​றுக்​கொண்​டார்​கள். என் அக்கா ஹேம​மாலினி, அப்​போது பெரிய டப்​பிங் கலைஞ​ராக இருந்​தார்.

அவரின் தம்பி என்​ப​தால் எனக்​கும் மதிப்பு கிடைத்​தது. ஆனால், “டேய், என் தம்​பிக்கு வாய்ப்​புக் கொடுங்​கன்னு நான் போய் கேட்க மாட்​டேன், நீயா உழைச்சு முன்​னேறு” என்று சொல்​லி​விட்​டார். ஆரூர்​தாஸ் ஐயா​வின் டப்​பிங் வேலைகள் காலை​யில் 7 மணிக்​குத் தொடங்கி இரவு 2 மணி வரை போகும்.

ஆரூர்தாஸ்

தி.நகர் போக் சாலை​யில் ஆனந்த் ஹவுஸ் என்ற டப்​பிங் தியேட்​டர் இருந்​தது. அங்​கு​தான் பேசுவோம். அப்​போது சின்​ன​போரூரில் வசித்து வந்​தேன். சைக்​கிள் கூட கிடை​யாது. பேருந்​தில் செல்​வேன். இரவு 2 மணிக்கு மேல் பேருந்து சர்​வீஸ் கிடை​யாது! நான் நடந்தே வீட்​டுக்​குச் செல்​வேன். அப்​போது போலீ​ஸார் நிறுத்தி விசா​ரிப்​பார்​கள். என்​னை​யும் யூனி​பார்​மில் இல்​லாத போலீஸ்​காரர் ஒரு​முறை விசா​ரித்​தார்.

‘நில்​லு, யார் நீ?’ என்​றார். ‘மனிதன்’ என்​றேன். பிறகு இரு​வருக்​கும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. ‘உன்​னைப் பார்த்தா சந்​தேக​மாக இருக்​கு, ஸ்டேஷனுக்கு வா’ என்​றார். சரி என்று சொல்லி விட்டு அங்கு வந்​ததும் ஜேப்​பி​யார் அண்​ணனுக்கு ஃபோன் பண்​ணிக்​கொள்​கிறேன் என்​றேன். அவர் அப்​போது ‘வசந்த அழைப்​பு​கள்’ போன்ற படங்​களைத் தயாரித்​துக் கொண்​டிருந்​தார்.

அவர் படத்​தில்​தான் டப்​பிங் பேசி விட்டு வந்து கொண்​டிருந்​தேன். பிறகு என்ன நினைத்​தா​ரோ, “சரி, சரி போங்க” என்று அனுப்பி வைத்​தார். அந்த இடத்​தில் எனக்கு ஜேப்​பி​யார் அண்​ணனின் பெயர் உதவியது. பிறகு வீட்​டுக்​குப் போய் குளித்​து​விட்டு அம்​மா​விடம் கொஞ்ச நேரம் பேசுவேன். காபி குடித்து விட்டு முதுகில் மாட்​டிக் கொள்​ளும் பேக்​கில் ஒரு சட்​டை​யும் பேன்ட்​டும் எடுத்​துக் கொண்டு சிறிது நேரத்​தில் வெளியே வந்​தால், முதல் பேருந்து 5.15 மணிக்கு வரும்.

அதில் ஏறி, வள்​ளுவர் கோட்​டம் ஸ்டாப்​பில் இறங்​கு​வேன். அங்​கிருந்து நடிகர் சங்​கம் இருக்​கும் அபிபுல்லா சாலை வழி​யாக ஓடி நேராக ஆனந்த் ஹவுஸ் போவேன். அங்கு டப்​பிங் பணி, 15 நாள்​கள் நடக்​கும் என்​ப​தால் குளியலறை​யில், உடலுக்​கும் துணிக்​கும் என தனித்​தனி சோப்​பு​களை வைத் திருப்​பேன். துணி​களைத் துவைத்து அங்​கேயே காயப் போட்​டு, குளித்​து​விட்​டுத் தயா​ராக இருப்​பேன்.

ஆருர்​தாஸ் ஐயா, காலை 6.45 மணிக்கு வரு​வார். “எப்​படி அதுக்​குள்ள வந்​தே?” என்​றெல்​லாம் கேட்​க​மாட்​டார். “மத்​தவங்க வரலையா?” என்​பார். “வந்​துரு​வாங்​கய்​யா” என்​பேன். பிறகு 7 மணிக்கு வேலை தொடங்​கும். அது ‘லூப்’ சிஸ்​டம். பகல் முழு​வதும் அப்​படியே நின்று வார்த்​தைகள் சரி​யாக ‘சிங்க்’ ஆகி​யிருக்​கிற​தா? என்று நான் பார்ப்​பேன். சில நேரம் மெது​வாக, “ஐயா, அந்த இடத்​துல இந்த வார்த்​தையை போடலா​மா?” என்று ஆலோ​சனை கேட்​பேன். ஏறக்​குறைய அவரிடம் உதவி​யாளர் போல வேலை செய்​தேன்.

அந்த நேரத்​தில், பாடலாசிரியர் மருத​காசி ஐயா​வின் மகன் மருத​பரணி​யின் யூனிட்​டிலும் இணைந்​தேன். பிறகு தேவ​நா​ராயணன், சமீபத்​தில் மரணமடைந்த எம்​.ஏ.பிர​காஷ், வைர​முத்​து, அவரிடம் அசிஸ்​டென்​டாக இருந்த ராஜேந்​திரன், ஆகியோர் யூனிட்​டிலும் பேச ஆரம்​பித்​தேன். பிறகு, தூர்​தர்​ஷனில் சீரியல்​கள் வந்​ததும் பிசி​யாகி​விட்​டேன். அப்​போது ஸ்கூட்​டர் வாங்​கி​யிருந்​தேன். ஒரு​முறை, தொடர்ந்து 96 மணி நேரம் தூங்​காமல் டப்​பிங் பேசி​யிருக்​கிறேன்.

அப்​படி பேசி​விட்டு ஸ்கூட்​டரில் போகும் போது தூக்​கம் கண்ணை இழுக்க எதிரில் பார்க்​கும் பொருள் எல்​லாம் சுற்று​வது போல இருந்​தது. என்​னால் என்ன செய்​வதென்று தெரிய​வில்​லை. பிறகு வீட்​டுக்கு எப்​படிப் போனேன்​ என்​று தெரிய​வில்​லை. அதை இப்​போது நினைத்​தா​லும்​ வியப்​பாகத்​தான்​ இருக்​கிறது.

( திங்கள்தோறும் பேசுவோம் )

முந்தைய அத்தியாயம்: விளையாட்டுப் போட்டியும் ஆண்டு விழாவும்... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 3

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x