Last Updated : 27 Oct, 2025 12:56 PM

 

Published : 27 Oct 2025 12:56 PM
Last Updated : 27 Oct 2025 12:56 PM

பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு பல்வேறு கதைகள் கேட்டு வந்தார். இறுதியாக தனது அடுத்த படத்தினை இன்று முதல் தொடங்கியிருக்கிறார்.

பவிஷ் நடிக்கும் புதிய படத்தினை தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தினை மகேஷ் ராஜேந்திரன் இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் ‘போகன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கியது, இப்படத்தினை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா.

காதல் கலந்த கமர்ஷியல் கதையாக உருவாகும் இப்படத்தில் நாகா துர்கா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இதன் ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக மகேந்திரன் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர். பவிஷ் – நாகா துர்கா ஆகியோருடன் முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x