Published : 09 Oct 2025 03:46 PM
Last Updated : 09 Oct 2025 03:46 PM
‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு வில்லன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் ஆண்டரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆனால், வில்லன் யார் என்பது முடிவாகாமல் உள்ளது. இதனிடையே, இதில் வில்லனாக நடிக்க உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தாணு தயாரிப்பில் கிச்சா சுதீப் நடித்த ‘மேக்ஸ்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரில் யாரேனும் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாவார்கள் என கூறப்படுகிறது.
அக்டோபர் 16-ம் தேதி அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அரசன்’ படத்தின் அறிமுக ப்ரோமோ வெளியாகவுள்ளது. அதில் சிம்புவின் லுக் மற்றும் கதைக்களம் உள்ளிட்டவை தெரியவரும். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT