Last Updated : 26 Sep, 2025 11:23 PM

 

Published : 26 Sep 2025 11:23 PM
Last Updated : 26 Sep 2025 11:23 PM

‘96’ நடிகர்களின்றி 2-ம் பாகம் இல்லை: பிரேம் குமார் உறுதி

‘96’ படத்தின் நடிகர்கள் இல்லாமல் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று இயக்குநர் பிரேம் குமார் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்தினை எழுதியுள்ளார் பிரேம் குமார். முதல் பாகத்தின் முடிவில் இருந்தே 2-ம் பாகம் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘96’ 2-ம் பாகத்தினை உருவாக்கும் பணிகளில் இறங்கினார். ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்கள் இப்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அவர்களுடைய சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ஒத்திவைத்துவிட்டார்கள். ஆனால், முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் இல்லாவிட்டால் 2-ம் பாகத்தினை உருவாக்கவே மாட்டேன் என்று பேட்டியொன்றில் உறுதிப்பட தெரிவித்துள்ளார் பிரேம் குமார்.

சமீபத்தில் ‘96’ 2-ம் பாகத்தின் கதையினை படித்துவிட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அந்தளவுக்கு அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும், தான் இதுவரை எழுதியுள்ள கதையிலும், இனிமேல் எழுதயிருக்கிற கதையிலும் ‘96’ 2-ம் பாகத்தின் கதையே சிறந்தது எனவும் பிரேம் குமார் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது படமாக உருவாகுமா என்பது தான் இப்போதைய பெரிய கேள்வியாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x