Last Updated : 04 Sep, 2025 10:12 PM

 

Published : 04 Sep 2025 10:12 PM
Last Updated : 04 Sep 2025 10:12 PM

கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ் - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கோர்ட் ரூம் டிராமாவாக இப்படம் உருவாக இருக்கிறது. இதில் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

இதன் ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக பிரசன்னா ஜி.கே உள்ளிட்டோர் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் அறிமுக போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x