Last Updated : 29 Aug, 2025 12:03 PM

 

Published : 29 Aug 2025 12:03 PM
Last Updated : 29 Aug 2025 12:03 PM

நாயகனாகும் ’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர்: படப்பிடிப்பு தொடக்கம்

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து புதிய படமொன்றை தயாரித்து வருகிறார்கள். இதன் படப்பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு, ஆர்.ஜே.பாலாஜி, மணிகண்டன், டிடி, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

இப்படத்தின் மூலம் ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், காதல் கதையாக இப்படம் உருவாகிறது. ’லவ்வர்’, ’டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

அபிஷன் ஜீவிந்த்துக்கு நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x