Last Updated : 16 Jul, 2025 12:31 AM

 

Published : 16 Jul 2025 12:31 AM
Last Updated : 16 Jul 2025 12:31 AM

சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மறைந்த நடிகை சரோஜாதேவியின் உடல் மண்டியா மாவட்டம் தஷாவரா கிராமத்தில் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.படம்:பிடிஐ

பெங்களூரு: மறைந்த நடிகை சரோஜாதேவியின் (87) உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரி​யாதை​யுடன் நல்லடக்​கம் செய்​யப்​பட்​டது.

தமிழ், கன்​னடம், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் 200-க்​கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில் நடித்து ரசிகர்​களை கவர்ந்த நடிகை சரோஜாதேவி, பெங்​களூரு​வில் நேற்று முன்​தினம் கால​மா​னார்.

அவரது உடலுக்கு கர்​நாடகமுதல்​வர் சித்​த​ராமை​யா, துணைமுதல்​வர் டி.கே.சிவகு​மார், கன்னட முன்​னணி நடிகர்​கள் சிவ​ராஜ்
குமார், உபேந்​தி​ரா, கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் உள்​ளிட்​டோர் மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்தினர். பெங்​களூரு எம்ஜிஆர் மன்ற தலைவர் சி.எஸ்.குமார் தலைமையில் ஏராள​மான ரசிகர்​களும், ஆயிரக்​கணக்​கான கன்னட ரசிகர்​களும் அவரது உடலுக்கு மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தினர்.

இதையடுத்து சரோஜாதேவி​யின் உடல் அவரது சொந்த ஊரான சென்​னபட்​ணாவை அடுத்​துள்ள தஷாவ​ரா​வுக்கு வாக​னத்​தில் ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்​டது. வழிநெடுக அவரது ரசிகர்​களும் கிராம மக்​களும் மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் சரோஜாதேவி​யின் உடல் தஷாவரா கிராமத்​தில் உள்ள கொடிஹள்ளி தோட்​டத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

சரோஜாதேவி​யின் குடும்​பத்​தினர் ஒக்​கலிக சமூக சம்​பிர​தாயப்​படி இறுதி சடங்​கு​களை மேற்​கொண்​டனர். பின்​னர் துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் அரசு சார்​பில் மலர்​வளை​யம் வைத்து வணங்​கி​னார். இதையடுத்து முழு அரசு மரி​யாதை​யுடன், போலீ​ஸாரின் அணிவகுப்​புடன் துப்​பாக்கி குண்​டு​கள் முழங்க சரோஜாதேவி​யின் உடல் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது. பின்​னர் இறுதி ஊர்​வலத்​தில் பங்​கேற்ற ஆயிரக்​கணக்​கான ரசிகர்​கள் அவர் புதைக்​கப்​பட்ட இடத்​தில்​ மலர்​களை தூவி அஞ்​சலி செலுத்​தினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x