Published : 01 Jun 2025 09:49 AM
Last Updated : 01 Jun 2025 09:49 AM

கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு? - சீமான் கேள்வி

வ.க​வுதமன் இயக்கி நடித்​துள்ள படம், ‘படை​யாண்ட மாவீ​ரா'. காடு​வெட்டி குரு-​வின் வாழ்க்​கைக் கதை​யான இதில் சமுத்​திரக்​க​னி, பூஜி​தா, பாகுபலி பிர​பாகர், சரண்யா பொன்​வண்​ணன், சாய் தீனா, ஆடு​களம் நரேன், மன்​சூர் அலி​கான், தமிழ் கவுதமன் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர்.

நிர்​மல் சரவண​ராஜ், எஸ்​.கிருஷ்ண மூர்த்தி தயாரிப்​பில் வி.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்​கும் இந்​தப் படத்​தின் பாடல்களுக்கு ஜி.​வி. பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். சாம்​.சி.எஸ். பின்​னணி இசை அமைத்​துள்​ளார். இதன் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசும்​போது, ‘‘தமிழில் இருந்​து​தான் கன்னட மொழி வந்​தது என்று கமல்​ஹாசன் சொன்​னது வரலாறு. அதை அவர் பேசி​யிருக்​கிறார். அதை ஏற்​பதும் ஏற்​காததும் உங்​கள் விருப்​பம். அவர் படத்தை ஓட விட​மாட்​டோம் என்​கிறார்​கள். நாங்​கள், உங்​களின் கேஜிஎப் போன்ற படங்​களைச் சுதந்​திர​மாக ஓடவிட்​டதற்​கான பரிசு இது. நீங்​கள் தடுத்​தால் எங்​களுக்​குத் தடுக்க முடி​யா​தா? முடி​யும். ஆனால் நாங்​கள் செய்​வ​தில்​லை. ஏனென்​றால் தமிழனின் பேரன்​பும் பெருந்தன்​மை​யும் மாண்​பும் அது. உங்​கள் பகையை படத்​தி​லும் குடிக்​கும் நீரிலுமா காட்​டு​வது?

கவுதமன், 'படை​யாண்ட மாவீ​ரா'வை வீர​மும் அறமும் சுமந்த படைப்​பாக எடுத்​துள் ளார். அவர் படைப்​பாற்​றலை நாம் ஏற்​கெனவே கண்​டுள்​ளோம். ‘சந்​தனக்​காடு’, ‘மகிழ்ச்​சி’ அவர் திறமைக்​கான சான்​றுகள். அவரின் அடுத்த படைப்​பான‌ ‘படையாண்ட மாவீ​ரா’ மிக​வும் அரு​மை​யாக வந்​துள்​ளது. இதைத் திரைப்​பட​மாக மட்​டும் சுருக்​கி​விட முடி​யாது. மிகுந்த உழைப்​பு, சிரமத்​துக்​குப் பிறகு இப்​படம் உரு​வாகியுள்​ளது.
முன்​னோட்​டத்​தை​யும், பாடல்​களை​யும் பார்த்​தேன். படத்​தைப் பார்க்​கத் தூண்​டு​கின்​றன” என்​றார்.

தயாரிப்​பாளர் சிவசக்தி பாண்​டியன், இயக்​குநர்​கள் வி.சேகர், வசந்​த​பாலன், பேரரசு, நடிகர் இளவரசு மற்​றும்​ படக்​குழு​வினர்​ கலந்​துகொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x