Last Updated : 29 May, 2025 02:19 PM

 

Published : 29 May 2025 02:19 PM
Last Updated : 29 May 2025 02:19 PM

இதமான அனுபவம் தந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ - நானி பாராட்டு

‘டூரிஸ்ட் பேமிலி’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு நடிகர் நானி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இப்படத்தினை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

உலகளவில் சுமார் ரூ.80 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’. குறைந்த பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு இந்தளவுக்கு வசூல் செய்திருப்பதால் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கிறது. இதனிடையே ‘டூரிஸ்ட் பேமிலி’ பார்த்துவிட்டு நானியும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படம் குறித்து நானி தனது எக்ஸ் தளத்தில், “எளிமையான நிறைய நன்மைகளைக் கொண்ட மனதிற்கு இதமான படங்கள் நமக்கு தேவை. இதனை ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் கொடுத்திருக்கிறது. இப்படியொரு அட்டகாசமான படத்தைக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. இப்போது மிகவும் தேவையான படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x