Published : 25 May 2025 10:08 AM
Last Updated : 25 May 2025 10:08 AM

இரண்டு தலைப்பில் வெளியான ‘கி​ராதா அர்​ஜு​னா’!

சினிமா தொடங்​கிய ஆரம்ப காலகட்​டத்​தில் புராண மற்​றும் பக்​திக் கதைகளே அதி​கம் படமாக்கப்​பட்​டன. அந்​தப் படங்​களுக்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்து அது​போன்ற படங்​கள் அதி​க​மாக உரு​வாகின. அதில் மகா​பாரதத்​தின் கிளைக் கதைகளில் ஒன்றை எடுத்து உரு​வான படம், ‘கி​ராதா அர்​ஜு​னா’. இந்​தப் படத்​துக்கு ‘ஊர்​வசி சாகசம்’ என்று இன்​னொரு தலைப்​பை​யும் வைத்​தனர். இரண்டு தலைப்​பு​களு​டன் வெளி​யான படம் இது. அந்த கால​கட்​டத்​தில் சில படங்​கள் இரண்டு தலைப்​பு​களு​டன் வெளி​யாகி இருக்​கின்​றன.

அர்ச்​சுனன் தன்​மீது வைத்​திருக்​கும் பக்​தி​யை, பார்​வதி தேவிக்கு உணர்த்த விரும்​பிய சிவன், அர்ச்​சுனன் வேட்​டை​யாடிக் கொண்​டிருந்த போது, கிராதா என்ற வேட​னாக அங்கு செல்​கிறார். அப்​போது காட்​டுப் பன்றி ஒன்று அர்ச்சுனனை நோக்​கிப் பாய்ந்து வரு​வதைக் கண்ட வில் வீர​ரான அவர், அதை நோக்கி ஓர் அம்பு எய்​கிறார். கிரா​தா​வும் அம்பு எய்ய, காட்​டுப் பன்றி இறக்​கிறது. காட்​டுப்​பன்றி உரு​வத்​தில் வந்​தது, மூகாசுரன் என்ற அசுரன். காட்​டுப்​பன்றி இறந்​ததும் அசுரன் தன் சுய உரு​வத்​தைப் பெறுகிறான். இதற்​கிடையே பன்​றியைக் கொன்​றது யார் என கிரா​தாவுக்​கும் அர்ச்​சுனனுக்​கும் மோதல் ஏற்​படு​கிறது. இறு​தி​யில் கிராதா வெற்றி பெறுகிறார்.

அர்ச்​சுனன் அங்​கிருந்த சேற்​றில் சிவலிங்​கம் செய்து அதற்கு மலர்களால் வழி​பாடு செய்​கிறார். சிவ லிங்​கத்​தின் மீது அவர் சொரிந்த பூக்​கள் கிரா​தா​வின் தலை​யில் வீழ்​வதைக் கண்டு ஆச்​சரியப்​படு​கிறார். கிராதா உண்​மை​யில் சிவன்​ தான் என்​பதை அர்ச்​சுனன் உணர்ந்து அவரைப் பணி​கிறார். அவரது பக்​தியை மெச்​சும் சிவபெரு​மான், அவர் வேண்​டிய பாசுப​தாஸ்​திரத்தை கொடுப்​பது கதை.

ஜி.​ராமசேஷன், முரு​க​தாசா இணைந்து இயக்​கிய படம் இது. பிரபல கர்​னாடக இசைக் கலைஞரும், மகா​ராஜபுரம் விஸ்​வ​நாத ஐயரின் தம்​பி​யு​மான எம்​.ஆர். கிருஷ்ண​மூர்த்​தி, அர்ச்​சுன​னாக நடித்​தார். சிறந்த பாடகர் மற்​றும் நடிகர் இவர். சினி​மாவுக்கு வரு​வதற்கு முன் நாடகங்​களில் நடித்து வந்​தார். இதற்கு முன் பாமா விஜ​யம் (1934) படத்​தில் கிருஷ்ண​ராக நடித்​திருந்​தார்.

‘கி​ராதா அர்​ஜு​னா’ படத்​தில் நாரத​ராக நடித்த கர்​னாடக இசை வித்​து​வான் பவானி கே. சாம்​பமூர்த்​தி, படத்​துக்கு இசை அமைத்​திருந்​தார். சிவபெரு​மா​னாக டி.எம்​.​ராம​சாமி பிள்​ளை, பிரம்​மாத​மாக நடித்​திருந்​தார். அர்​ஜுனனை தவத்​தில் இருந்து விலக்க, இந்​திர​னால் அனுப்​பப்​பட்ட நடன மங்கை ஊர்​வாசி​யாக, திருக்​கரை​வாசல் சுப்​புலட்​சுமி நடித்​தார். பி.பி.ரங்​காச்​சாரி, எம்​.​வி.சுலோச்​ச​னா, எம்​.எஸ்​.மணி, டி.​வி.லட்​சுமி என பலர் நடித்​தனர்.

வீனஸ் பிக்​சர்ஸ் (இது, ஸ்ரீதரின் வீனஸ் பிக்​சர்ஸ் அல்ல) தயாரித்த இந்​தப் படத்​துக்கு பாப​நாசம் சிவன் பாடல்​கள் எழு​தி​னார். ஜி.சிங், தேவ்ஜி ஒளிப்​ப​திவு செய்​தனர். 1939-ம் ஆண்​டில் தணிக்கை செய்​யப்​பட்​டாலும் சில காரணங்​களால் 1940-ம் ஆண்டு இதே தேதி​யில் வெளி​யான இந்​தப் படம் நன்​றாக ஓடியது. ஆனால், இந்​தப்​ படத்​தின்​ பிரின்ட்​ இப்​போது இல்​லை என்​பது சோகம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x