Published : 17 May 2025 03:30 PM
Last Updated : 17 May 2025 03:30 PM
ரஜினியின் அடுத்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ‘கூலி’ படத்தை தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘கூலி’ வெளியாகவுள்ளது.
‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு ரஜினியின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதனிடையே, தற்போது புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதால், அவரை தனது அடுத்த படத்தின் இயக்குநராக முடிவு செய்திருக்கிறார் என்பதுதான் அந்த தகவல்.
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சரிப்போதா சனிவாரம்’ படத்தின் இயக்குநர்தான் விவேக் ஆத்ரேயா. அந்தப் படத்தில் இடம்பெற்ற மாஸ் காட்சிகள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றன. ரஜினி – விவேக் ஆத்ரேயா இணையும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் கூறுகிறார்கள். விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT