Published : 12 May 2025 03:18 PM
Last Updated : 12 May 2025 03:18 PM
‘கூலி’ படத்துக்குப் பின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்குப் பின் ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதனிடையே தனது அடுத்த திட்டங்கள் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். “அடுத்து ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். பின் கமல் சாருடன் ‘விக்ரம் 2’ பண்ணவுள்ளேன். அந்தக் கதையும் இன்னும் முடியவில்லை. அடுத்து இறுதியாக ‘லியோ 2’ இயக்கவுள்ளேன்.
பின் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை வைத்து தனிப்படம் ஒன்று இயக்க இருக்கிறேன். அதற்கு ஐடியா இருக்கிறது. சூர்யா சாருடன் இது குறித்து பேசியிருக்கிறேன். இருவருமே எங்களுடைய படங்களை முடித்து நேரம் வரும் போது அப்படத்தில் இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT