Published : 07 May 2025 11:41 AM
Last Updated : 07 May 2025 11:41 AM
‘ரெட்ரோ’ பார்த்துவிட்டு படக்குழுவினரை ரஜினி பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இப்படத்தின் கதையை முதலில் ரஜினியை மனதில் வைத்தே எழுதியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.
தற்போது ‘ரெட்ரோ’ பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியிருக்கிறார். ரஜினி பாராட்டு குறித்து கார்த்திக் சுப்புராஜ், “தலைவர் ரெட்ரோ பார்த்தார். அவருக்கு அப்படம் மிகவும் பிடித்திருந்தது. தலைவரின் வார்த்தைகள் - ‘என்ன ஓர் அற்புதமான முயற்சி. சூர்யா நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் சூப்பர். “LAUGHTER” பக்கங்கள் அற்புதம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’. நன்றி தலைவா” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் பாராட்டால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும், தமிழகத்தில் முதல் நாள் அதிக வசூல் செய்த சூர்யா படம் என்ற சாதனை படைத்திருக்கிறது ‘ரெட்ரோ’. மேலும் வரும் வார இறுதி நாட்களில் இப்படம் எப்படி வசூல் செய்ய இருக்கிறது என்பது விரைவில் தெரியவரும்.
Thalaivar watched #Retro & he Loved it....
Exact words of Thalaivar......
"What an effort by whole team.... Suriya performance Super.... Last 40 minutes of the film Superb... Laughter touch is Fantastic....God bless"
Am flying now.....Love you Thalaivaaa … pic.twitter.com/D9pBy5DjhJ— karthik subbaraj (@karthiksubbaraj) May 6, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT