Published : 27 Apr 2025 11:37 PM
Last Updated : 27 Apr 2025 11:37 PM
சிம்புவுக்கு நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் சிம்புவுக்கு நாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
சிம்பு - கயாடு லோஹர் கூட்டணியுடன் சந்தானமும் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்திருந்தார் சந்தானம். இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ராம்குமார் படத்தினை முடித்துவிட்டு, தனது 50-வது படத்துக்கு செல்கிறார் சிம்பு. அதனை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இத்துடனேயே தனது 51-வது படத்தையும் தொடங்குகிறார் சிம்பு. அதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT