Published : 22 Apr 2025 09:00 PM
Last Updated : 22 Apr 2025 09:00 PM
சூர்யாவின் அடுத்த படத்துக்கான இசைப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
‘ரெட்ரோ’ படத்துக்குப் பின், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளார்கள்.
தற்போது இதன் படப்பிடிப்பு முன்பாகவே, இசைப் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக வெங்கி அட்லுரி - ஜி.வி.பிரகாஷ் இருவரும் துபாய் சென்றிருக்கிறார்கள். அங்கு பாடல் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், சில காட்சிகளுக்கான பின்னணி இசையையும் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
வெங்கி அட்லுரி இயக்கும் படம் என்றாலே ஜி.வி.பிரகாஷ் தான் இசை. அந்தளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். அந்த நட்பு சூர்யா படத்திலும் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT