Published : 13 Apr 2025 02:28 PM
Last Updated : 13 Apr 2025 02:28 PM
‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமை விற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிக்கும் கடைசி படமாக உருவாகி வருகிறது ‘ஜனநாயகன்’. இதன் தமிழக உரிமையினை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. லலித் குமார், ராகுல் உள்ளிட்ட பலர் இதன் உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்கள். இதில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழக உரிமையினை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’கோட்’ படத்தின் தமிழக உரிமையினைக் கைப்பற்றி வெளியிட்டு வெற்றி கண்டவர் ராகுல் என்பது நினைவுக் கூரத்தக்கது. இதனால் ‘ஜனநாயகன்’ உரிமையிலும் இவருக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் எதுவுமே ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை. அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன், அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT