Published : 27 Mar 2025 10:04 AM
Last Updated : 27 Mar 2025 10:04 AM

‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து இணையத்தில் பரவும் வதந்தி: குஷ்பு விளக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கஸண்ட்ரா, மீனா உட்பட பலர் நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் இயக்குநர் சுந்தர்.சி-க்கும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சினை ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதை மறுத்து நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலவி வருகின்றன. அது உண்மையில்லை. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

சுந்தர். சி எப்படிப்பட்ட இயக்குநர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல, நயன்தாரா, திறமையான நடிகை என்பதை நிரூபித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தில், மீண்டும் நடித்து வருகிறார். இணையத்தில் பரவும் இந்த வதந்திகள் ‘திருஷ்டி எடுத்த மாதிரி’. நடப்பதெல்லாம் நன்மைக்கே. உங்களின் ஆசீர்வாதம் மற்றும் அன்பை மட்டுமே நாங்கள் நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x