Published : 18 Feb 2025 08:30 AM
Last Updated : 18 Feb 2025 08:30 AM
நடிகர் செந்தில் கேங்ஸ்டராக நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், ரவிமரியா, கனல் கண்ணன், சென்ராயன் என பலர் நடிக்கும் இந்தப் படத்தை பிஎம்எஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில் முரளி பிரபாகரன் தயாரிக்கிறார். சாய் பிரபா மீனா இயக்குகிறார்.
நாற்காலியில் அமரப்போகும் தலைவன் யார் எனும் போட்டி, நான்கு கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையே நடக்கிறது. அதில் வெல்லப்போவது யார்? என்பது கதை. நரேஷ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.முத்து ஒளிப்பதிவு செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT