Published : 16 Feb 2025 11:31 PM
Last Updated : 16 Feb 2025 11:31 PM
‘எஸ்.டி.ஆர் 49’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.
சிம்புவின் பிறந்த நாளன்று அவருடைய 49-வது படம் அறிவிக்கப்பட்டது. அதனை ‘பார்க்கிங்’ படம் மூலம் கவனம் ஈர்த்த ராம்குமார் இயக்கவுள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் முழுக்க கல்லூரிக்குள் நடப்பது போன்று திரைக்கதையை வடிவமைத்துள்ளார் ராம்குமார். இதனால் இதன் படப்பிடிப்பு மே மற்றும் ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.
இப்படத்தில் சிம்புவுக்கு நாயகியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், இதில் இசையமைக்க அனிருத்திடம் தான் பேசியிருக்கிறார்கள். அவரோ பல்வேறு படங்களுக்கு இசையமைப்பதால் வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது சாய் அபயங்கரிடம் பேசியுள்ளனர். அவரும் சம்மதம் தெரிவிக்கவே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
‘எஸ்.டி.ஆர் 49’ பட குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு ‘எஸ்.டி.ஆர் 50’ மற்றும் ‘எஸ்.டி.ஆர் 51’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் சிம்பு. இந்த இரண்டு படங்களையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT