Published : 05 Feb 2025 10:22 AM
Last Updated : 05 Feb 2025 10:22 AM

ஒருவரே 21 பொறுப்புகளை ஏற்று உருவாக்கிய திரைப்படம்!

தமிழ் திரையுலகில் முதன்​முறை​யாகக் கதை, திரைக்​கதை, வசனம், பாடல்​கள், இசை, ஒளிப்​ப​திவு, கலை, நடனம், சண்டைப் பயிற்சி, இசை, கதாநாயகன் உட்பட 21 பொறுப்புகளை ஏற்று குகன் சக்கர​வர்த்தி​யார் உருவாக்கி இருக்​கும் படம், ‘வங்காள விரி​குடா குறுநில மன்னன்’.

இதில் ஜெய்ஸ்ரீ, பிரபாத், அலினா ஷேக், வாசு விக்​ரம், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்​துள்ளனர். மாதா பிதா ஃபிலிம் பேக்டரி சார்​பில் ராஜலட்​சுமி நடராஜன் வழங்​கும் படமான இது, மகா சிவராத்​திரியை முன்னிட்டு வரும் 28-ம் தேதி வெளி​யாகிறது.

படம்​பற்றி குகன் சக்கர​வர்த்தி​யார் கூறும்​போது “பாடலாசிரியர் குருவிக்​கரம்பை சண்முகத்​தின் உறவினர் நான். டி.ராஜேந்​தரின் சிஷ்யன். ஏற்கெனவே சில படங்​களில் 2-வது நாயகனாக நடித்​திருக்​கிறேன். இதில் நாயகனாக நடித்​துள்ளேன். நம் மக்களின் அழகான வாழ்​வியலுடன் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி​யுள்​ளது. ஒரு சாதாரண மனிதன், அடித்​தட்​டில் இருந்து முன்னேறி கோடீஸ்​வரனாகிறான். அதைத் தக்க வைக்க சில தவறுகளைச் செய்​கிறான்.

பிறகு எப்படி வாழவேண்​டும், எப்படி வாழக்​கூடாது என்பதை உணர்வது கதை. அப்துல் கலாமின் கருத்துகளை வலியுறுத்​தும் படம் என்ப​தால், சிறப்​புக் காட்​சியாக மாணவர்​களுக்​குத் திரையிட இருக்​கிறோம். ஒரு படத்​தின் 21 பொறுப்பு​களை​யும் ஏற்று யாரும் படம் உருவாக்க​வில்லை. நான் இந்த முயற்​சியை எடுத்​திருக்​கிறேன். இந்தப் படம் தெலுங்​கில் ‘பங்காள ​காதம்​லோ’, இந்​தி​யில், ‘பே ஆஃப் பெங்​கால்’ ஆகிய பெயர்​களில் வெளியாக இருக்​கிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x