Published : 18 Nov 2025 10:17 AM
Last Updated : 18 Nov 2025 10:17 AM
தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்வாலைத் திருமணம் செய்து கொண்டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் நடிகர் ஜான் கொக்கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016ம் ஆண்டு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்ற மீரா வாசுதேவன், ஒளிப்பதிவாளர் விபின் என்பவரைத் திருமணம் செய்தார். இப்போது அவரையும் பிரிந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பதிவிட்டுள்ள மீரா வாசுதேவன் ”2025 ஆகஸ்ட் முதல் தனியாக இருக்கிறேன் என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மிக அழகான, அமைதியான கட்டத்தில் இப்போது இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT