Published : 18 Nov 2025 09:34 AM
Last Updated : 18 Nov 2025 09:34 AM

2 பாகங்களாக உருவாகிறது பிரபாஸின் ‘ஃபவுஸி’ இயக்குநர் தகவல்

துல்​கர் சல்​மான், மிருணாள் தாக்​குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீ​தா​ராமம்’ படத்தை இயக்​கிய​வர் ஹனு ராகவபுடி. இவர், அடுத்து இயக்​கும் ‘ஃபவுஸி’ என்ற படத்​தில் பிர​பாஸ் கதா​நாயக​னாக நடிக்​கிறார்.

மிதுன் சக்​கர​வர்த்​தி, ஜெயப்​பிர​தா, இயான்வி முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இப்படத்​துக்கு விஷால் சந்​திரசேகர் இசை அமைக்​கிறார். வரலாற்​றுப் பின்​னணி​யில் உரு​வாகும் இந்​தப் படத்​தில் பிர​பாஸ் போர்​வீர​னாக நடிக்​கிறார். இந்த பான்​-இந்​தியா படத்​தின் டைட்​டில் லுக் அக்​டோபரில் வெளி​யானது.

இந்​நிலை​யில் இந்​தப் படம் 2 பாகங்​களாக உரு​வாகிறது என இயக்​குநர் ஹனு ராகவபுடி தெரி​வித்​துள்​ளார். "இந்த படத்​தில் பிர​பாஸின் கதா​பாத்​திரத்​தைச் சுற்​றி​யுள்ள உலகம் முதல் பாகத்​தின் வலு​வாக இருக்​கும். 2-ம் பாகத்​தில் முற்​றி​லும் மாறு​பட்ட பரி​மாணத்​தில் கதை செல்​லும். பிரிட்​டிஷ் காலனித்​ துவ காலத்​திலிருந்து நமக்​கு அதிக கதைகள் கிடைக்​கின்​றன.

சுதந்​திரப் போராட்ட வீரர்​களின் வீர​மும் தன்​னம்​பிக்​கை​யும் இந்த படத்​தின் முக்​கிய பலமாக இருக்​கும். மறக்​கப்​பட்ட ஹீரோக்​களின் கதைகளை உற்​சாக​மான முறை​யில் காண்​பிக்​கும் நோக்​கத்​துடன் இது உரு​வாகிறது. அந்த வீரர்​களின் சில கதைகள் துயர​மாக முடிந்​திருக்​கலாம், ஆனால் அவர்​களை பாசிட்​டி​வாக காட்ட முயன்​றிருக்​கிறேன். என்​னைத் தனிப்​பட்ட முறை​யில் பாதித்த சில அனுபவங்​களை​யும் இப்​படத்​தின் கதை​யில் சேர்த்​திருக்​கிறேன்" என்​றார்.

முன்​ன​தாக, ‘கர்​ணன் பாண்​ட​வர்​களு​டன் சேர்ந்து இருந்​தால் மகா​பாரதப் போர் எப்​படி மாறி​யிருக்​கும்?’ என்ற சிந்​தனை தான் இந்​தக் கதை​யின் மையக் கரு என்​று கூறி​யிருந்​தார்​, ஹனு ​ராகவபுடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x