Last Updated : 15 Nov, 2025 08:53 PM

 

Published : 15 Nov 2025 08:53 PM
Last Updated : 15 Nov 2025 08:53 PM

ராஜமவுலி, மகேஷ் பாபுவின் பட தலைப்பு ‘வாரணாசி’!

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் இன்று (நவ.15) ஏற்பாடு செய்தது படக்குழு. இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு, படத்தின் காட்சியுடன் வெளியிடப்படும் என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது இந்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. இதை மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘ஆர்ஆர்ஆர்‘ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. இதில் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ், மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இருக்கும் என்று ராஜமவுலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன் முக்கியமான காட்சிகள் காசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு கென்ய காடுகளில் நடக்க இருப்பதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கென்யாவில் நடைபெற்றது. அதன் காட்சிகள் கூட கடந்த செப்டம்பரில் இணையத்தில் கசிந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்துக்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நிஜ வாரணாசியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.50 கோடி செலவில் செட் அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது படத்தின் தலைப்பே ‘வாரணாசி’ என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக படக்குழு வெளியிட்டுள்ள டைட்டில் டீசரில் காளை மீது திரிசூலத்துடன் மகேஷ்பாபு வருவது போல காட்சிப்படுத்தப்படுள்ளது. அதை தொடர்ந்து படத்தின் தலைப்பு இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x