Published : 05 Nov 2025 11:59 AM
Last Updated : 05 Nov 2025 11:59 AM

ரஜினி, அமிதாப், மம்மூட்டி படங்கள் உள்பட ஆயிரம் திரைப்படங்களுக்கு டப்பிங் - சாய்குமார் பெருமிதம்

நடிகர் சாய்​கு​மார் தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் நடித்து வரு​கிறார். தனது 50 வருட சினிமா வாழ்க்​கை​யில் சுமார் 300-க்​கும் அதி​க​மான படங்​களில் நடித்​துள்ள அவர், டப்​பிங் கலைஞ​ராக ஆயிரம் படங்​களுக்கு மேல் பணி​யாற்​றி​யுள்​ளார்.

அவர் கூறும்​போது, “14 வயதிலேயே நடிக்க வந்​து​விட்​டேன். “தேவுடு சேசினா பெல்​லி” என்ற தெலுங்கு படத்​தில் பார்​வையற்ற சிறுவனாக நடித்​தேன். மூத்த நடிகர்​களு​ட​னும் அதில் நடிக்க வேண்​டி​யிருந்​தது. அப்​போது அது அவ்​வளவு எளி​தானதல்ல. என் பெற்றோர் அப்​போது எனக்​குச் சொன்​னது, ‘இயக்​குநரின் நடிக​னாக இரு’ என்​ப​தைத்​தான்.

அதை இப்​போது​வரை பின்​பற்றி வரு​கிறேன். என் பெற்​றோர் புகழ்​பெற்ற டப்​பிங் கலைஞர்​களாக இருந்​த​தால் 1973- ம் ஆண்​டிலேயே டப்​பிங் வேலையை தொடங்​கி​விட்​டேன். தெலுங்கு சூப்​பர் ஸ்டார் என்​.டி.​ராம​ராவ் போன்ற ஜாம்​ப​வான்​களுக்கு டப்​பிங் பேசினேன். விஷ்ணுவர்​தன், ரஜினி​காந்த், மம்​மூட்​டி, மோகன்​லால், அமி​தாப் பச்​சன், சில்​வெஸ்​டர் ஸ்டலோன் போன்ற புகழ்​பெற்ற நடிகர்​களுக்கு அவர்​கள் படங்​களின் தெலுங்கு பதிப்​பிற்கு டப்​பிங் பேசி​யிருக்​கிறேன்.

சிரஞ்​சீ​வி, நாகார்​ஜுனா போன்ற தெலுங்கு நட்​சத்​திரங்​களுக்​கு, அவர்​களின் தமிழ்ப் பதிப்​பு​களுக்கு நானே டப்​பிங் பேசினேன்.50 ஆண்​டு​களுக்​குப் பிறகும், எனக்கு இன்​னும் அதிக ஏக்​கம் இருக்​கிறது. தேசிய விருதை வெல்ல விரும்​பு​கிறேன், ஆஸ்​கர் விருதை​யும் வெல்ல விரும்​பு​கிறேன். பாகுபலி, கே.ஜி.எஃப், காந்​தாரா போன்ற பெரிய படங்​களின் ஒரு பகு​தி​யாக இருக்க விரும்​பு​கிறேன். அந்த ஆசை இன்​னும் நிறைவேற​வில்​லை'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x