Published : 04 Nov 2025 10:57 AM
Last Updated : 04 Nov 2025 10:57 AM

இந்தி சினிமாவில் எல்லாமே ‘ஸ்லோ’ - தென்னிந்திய சினிமாவை புகழும் ஷ்ரத்தா தாஸ்

பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா தாஸ். தெலுங்​கிலும் நடித்து வரும் அவர், இந்தி சினி​மாவை விட தென்​னிந்​திய திரைப்​படங்​களின் படப்​பிடிப்​பு​கள், குறித்த நேரத்​தில் முடிவடைந்து விடு​வ​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​னிந்​திய திரைத்​துறை​யில் பணம் கொடுத்து படங்​களைப் பப்​ளிசிட்டி செய்​யும் முறையைப் பயன்​படுத்​து​வ​தில்​லை. அவர்​கள் வேலை​யில் கவனம் செலுத்​துகிறார் கள். ஒரு படத்​தில் அவர்​களின் கதா​பாத்​திரம் எவ்​வளவு சிறி​தாக இருந்​தா​லும் பார்​வை​யாளர்​கள் நடிகர்​களின் மீது கொள்​ளும் அன்பு சிறப்​பானது. தென்​னிந்​திய சினி​மா​வில் எனக்​குப் பிடித்​தது என்​னவென்​றால், ரசிகர்​கள் உங்​கள் படத்​தைப் பார்க்க பல மைல்​கள் பயணிப்​பார்​கள். அது பெரிய விஷ​யம்.

அதே போல அங்கு ஒரு படத்​தில் கையெழுத்​திட்​டதும் படப்​பிடிப்பு உள்​ளிட்ட மற்ற விஷ​யங்​கள் வேக​மாக நடக்​கும். படக்​குழு​வைச் சந்​திக்​காமல் தொலைபேசி அழைப்​பின் வழியே படங்​களை ஏற்​றுக்​கொண்​டிருக்​கிறேன். இந்தி சினி​மா​வில் எல்​லாம் மெது​வாக நடக்​கிறது. இவ்​வாறு ஷ்ரத்தா தாஸ் தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x